1. Blogs

எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, சூரியகாந்தி பயிரிட விவசாயிகளுக்கு வேண்டுகோள்

Anitha Jegadeesan
Anitha Jegadeesan
Sunflower farming

சூரியகாந்தி எண்ணெய் தேவை அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் விவசாயிகள் அனைவரும் சூரியகாந்தி பயிரிட முன் வர வேண்டும் என வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியில் சூரியகாந்தி பயிரிடுவதற்கான ஏற்ற சூழ்நிலை நிலவுகிறது.

மத்திய அரசு தற்போது எண்ணெய் இறக்குமதியை முற்றிலும் நிறுத்துவதற்கான நடவடிக்கையை  மேற் கொண்டு வருகிறது. எனவே உள்நாட்டு எண்ணெய் வித்துகளுக்கான சூரியகாந்தி விதைக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப் படுகிறது. குறுகிய கால பயிராகவும், குறைந்த சாகுபடிச் செலவு மற்றும்  குறைவான பாசன வசதியே போதுமானது.

இந்தியா முழுவதும் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு ஆலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எனவே விவசாயிகள் லாபம் தரும் சூரியகாந்தி பணப் பயிரை பயிரிட்டு பயன்பெறுமாறு வியாபாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் அதிக விலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

English Summary: Farmers are requested to cultivate profitable edible oil seed: Demand of sunflower seeds will be increase Published on: 26 November 2019, 12:05 IST

Like this article?

Hey! I am Anitha Jegadeesan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.