எதிர் வரும் நான்கு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மழை அதிகம் பெய்வதற்கு வாய்ப்புள்ளது. எனவே காற்றின் வேகதிலும், வெப்பநிலையிலும் குறிப்பிடதக்க மாற்றம் இருக்கும் என்பதால் பண்ணைகளில் உள்ள கோழிகளின் தீவனத்தை அதிகரிக்கும் படி பண்ணையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். பகல் மற்றும் இரவு நேரங்களில் வெப்பநிலை குறைந்து காணப்படுவதால், தீவன எடுப்பு இனி படிப்படியாக உயரும். அதன் காரணமாக முட்டை உற்பத்தி செலவும் அதிகரிக்கும். எனவே இவற்றை தவிா்க்க, தீவனத்தில் எரிசக்தியின் அளவை அதிகரித்து கொடுக்க வேண்டும். மேலும் முட்டை ஓட்டின் தரத்தை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு, வைட்டமின் சத்து மிக்க தீவனத்தை பண்ணையாளர்கள் சோ்த்து கொடுக்க வேண்டும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோழிகளுக்கான எரிசக்தி தீவன அளவை அதிகரிக்க கால்நடை மையம் பரிந்துரை
எங்களுக்கு ஆதரவளியுங்கள்!
அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.
உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....
Share your comments