1. விவசாய தகவல்கள்

கம்பு பயிரில் காணப்படும் புதிய நோய் கண்டுப்பிடிப்பு! சர்வதேச அமைப்பு அங்கீகாரம்!

Aruljothe Alagar
Aruljothe Alagar
New disease found in millet crop! International organization recognition!

இந்த நோய் உருவான பிறகு, இலைகளில் நீண்ட கோடுகள் உருவாகி படிப்படியாக செடி முழுவதும் பரவத் தொடங்குகிறது. இதற்குப் பிறகு, தண்டுகளில் நீர் தேங்கிய புள்ளிகள் போன்று தோன்றும், பின்னர் தண்டு முதலில் பழுப்பு நிறமாக மாறும், பின்னர் கருப்பு நிறத்தில் தோன்றும்.

உலகின் பெரும்பகுதியிலும் கம்புப் பயிரிடப்படுகிறது, ஆனால் இந்த பயிரில் பல நோய்கள் ஏற்படுவதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், ஹரியானா விஞ்ஞானிகள் கம்பு பயிரில் ஒரு நோயைக் கண்டுபிடித்துள்ளனர், இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சவுத்ரி சரண் சிங் அரியானா வேளாண் பல்கலைக்கழகம், ஹிசார், ஹரியானாவின் விஞ்ஞானிகள் இந்த நோயைப் பற்றி தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் தாவர நோயியல் துறையின் விஞ்ஞானி டாக்டர் வினோத் மாலிக் கண்டுபிடித்துள்ளார். டாக்டர் வினோத் இந்த நோயைப் பற்றி காணொளி காட்சி மூலம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது 2019 ஆம் ஆண்டில், இந்த நோய் அரியானாவின் ஹிசார், பிவானி மற்றும் ரேவாரி மாவட்ட விவசாயிகளின் பயிரில் காணப்பட்டது.

அப்போதிருந்து நாங்கள் இந்த நோய் பற்றிய தகவல்களை சேகரிப்பதில் தொடர்ந்து ஈடுபட்டோம், பிறகு இது ஒரு புதிய வகை நோய் என்று தெரிய வந்தது. இதற்குப் பிறகு, கடந்த ஆண்டு கோவிட் -19 காலத்தில் கூட பல விவசாயிகள் எங்களுக்கு இந்த நோய் குறித்து தெரியப்படுத்தினர்.

இந்தியாவின் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்கள் நாட்டின் மொத்த கம்பு உற்பத்தியில் 90% ஆகும். கரிஃப் பருவத்தில் மட்டுமே பெரும்பாலான கம்பு பயிரிடப்படுகிறது. கம்பில் பரவும் இந்த நோய் க்ளெப்சியெல்லா ஏரோஜெனஸ் என்ற பாக்டீரியாவால் பரவுகிறது என்று டாக்டர் மாலிக் விளக்கினார்.

"நாங்கள் தாவரங்களின் மாதிரிகளை எடுத்து, அதை உருவவியல், நோய்க்கிருமி, உயிர்வேதியியல் மற்றும் பல வகைகளை ஆய்வு செய்தோம், பிறகு இந்த நோய் க்ளெப்சியெல்லா ஏரோஜெனீஸ் பாக்டீரியாவால் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது.

க்ளெப்சியெல்லா ஏரோஜெனீஸ் (Klebsiella aerogenes) பாக்டீரியா மனித குடலில் காணப்பட்டாலும், அது மனித குடலில் இருந்து தாவரங்களுக்கு பரவியிருக்கலாம். "விஞ்ஞானிகள் இந்த நோயை தண்டு அழுகல் என்று பெயரிட்டுள்ளனர்.

தண்டு அழுகல் அறிகுறிகளைப் பற்றி, டாக்டர் மாலிக் கூறியதாவது, இந்த நோய் தோன்றியப் பிறகு, இலைகளில் நீண்ட கோடுகள் உருவாகின்றன மற்றும் படிப்படியாக  பயிர் முழுவதிலும் பரவுகிறது அதாவது தோன்றுகிறது. இதற்குப் பிறகு, தண்டுகளில் நீர் தேங்கிய புள்ளிகள் தோன்றும், பின்னர் தண்டு முதலில் பழுப்பு நிறமாகவும் பின்னர் கருப்பு நிறமாகவும் மாறும்.

இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, விஞ்ஞானிகள் அதை உயிரித் தொழில்நுட்ப தகவல் மையத்திற்கு (என்சிபிஐ) அனுப்பியுள்ளனர், அங்கு இது போன்ற புகார்கள் யாராலும் தெரிவிக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. டாக்டர் மாலிக் கூறியதாவது "என்சிபிஐ -க்கு புகாரளித்த பிறகு இது குறித்த அறிக்கை அமெரிக்கன் பைட்டோபோதாலஜிகல் சொசைட்டிக்கு (ஏபிஎஸ்) அனுப்பப்பட்டது.

கம்பில் உருவாகும் இந்த நோய்க்கான ஏதேனும் சிகிச்சை உள்ளதா என்பது குறித்து, டாக்டர் மாலிக் கூறியதாவது, "இப்போது இந்த நோயைப் பற்றி நாங்கள் கண்டுபிடித்துள்ளோம், வரவிருக்கும் நேரத்தில், அதன் சிகிச்சையும் கண்டுபிடிக்கப்படும், அதற்கான வேலை இப்போது செய்யப்பட்டுள்ளது.

"இந்த நோய்க்கான சிகிச்சையில் விஞ்ஞானிகள் வேலை செய்யத் தொடங்கியுள்ளனர், விரைவில் அதன் மரபணு மட்டத்தில் எதிர்ப்பின் மூலத்தைக் கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள். இந்த முயற்சியிலும் அவர்கள் விரைவில் வெற்றி பெறுவார்கள் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

மேலும் படிக்க...

பல நோய்களுக்கு சிறந்த மருந்து கம்பு! இதை புறக்கணித்தால் வரும் வம்பு !!

English Summary: New disease found in millet crop! International organization recognition! Published on: 21 October 2021, 12:22 IST

Like this article?

Hey! I am Aruljothe Alagar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.