1. செய்திகள்

பென்சனர்களுக்கு கடன் வசதி: அமுலுக்கு வந்தாச்சு புதிய திட்டம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Loan facility for Pensioners

ஓய்வூதியதாரர்களுக்கும் மருத்துவச் செலவுகள் உள்பட பல்வேறு பணத் தேவைகள் ஏற்படக்கூடும். இதை பூர்த்தி செய்வதற்காகவே, ஓய்வூதியதாரர்களுக்கான கடன் திட்டத்தை பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank) அறிமுகப்படுத்தியுள்ளது.

கடன் வசதி (Loan Facility)

சில வங்கிகள் 60 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு கடன் கொடுக்கின்றன. ஆனால், பஞ்சாப் நேஷனல் வங்கி பிரத்யேகமாக ஓய்வூதியதாரர்களுக்காக கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்கள் பெறும் பென்சன் தொகைக்கு ஏற்ப கடன் தொகை தீர்மானிக்கப்படுகிறது. 70 வயதுக்குட்பட்ட ஓய்வூதியதாரர்கள் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாயும், குறைந்தபட்சமாக 25,000 ரூபாயும் கடன் பெறலாம். அல்லது பென்சன் தொகையில் 18 மடங்கு கடனாக பெறலாம்.

70 - 75 வயது வரம்பிலான ஓய்வூதியதாரர்களுக்கு 7.5 லட்சம் ரூபாய் வரை அல்லது பென்சன் தொகையில் 18 மடங்கு கடன் தொகையாக பெற்றுக்கொள்ளலாம். 75 வயதை தாண்டிய ஓய்வூதியதாரர்கள் 5 லட்சம் ரூபாய் அல்லது பென்சன் தொகையில் 12 மடங்கு கடன் தொகையாக பெற்றுக்கொள்ளலாம்.

ஓய்வூதியதாரர்கள் கடன் தொகையை 5 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். 75 வயதை தாண்டியவர்கள் 2 ஆண்டுகளுக்குள் கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க

பென்சன் பற்றிய கவலையா? முத்தான 3 பென்சன் திட்டங்கள் இருக்கு!

500 ரூபாயில் புதிய தங்கம் மற்றும் வெள்ளி சேமிப்புத் திட்டம்!

English Summary: Loan facility for pensioners: A new plan has come into effect! Published on: 28 September 2022, 07:53 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.