1. செய்திகள்

தமிழகம் மற்றும் கேரளாவில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Northeast monsoon begins in Tamil Nadu and Kerala

தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் விடைபெற்றுள்ள நிலையில், இன்று வடகிழக்கு பருவமழை (North East Monsoon) தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்டத் தென்னிந்திய பகுதிகளில் துவங்கியுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

  • தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்ட சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

  • இதேபோல், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மோக மூட்டத்துடன் காணப்படும்.

  • நகரின் சிலப் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் சூரியகாந்தி விதைகள்!

காட்டுப்பன்றி கூட்டத்தால் கடலை செடிகள் நாசம்

English Summary: Northeast monsoon begins in Tamil Nadu and Kerala Published on: 28 October 2020, 04:37 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.