1. செய்திகள்

தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலைகள்:அதிர்ச்சியில் மக்கள்!!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Petrol Diesel

தின்தோறும் அதிகரித்து  வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சாமானிய மக்களின் வாழ்வை பாதித்துள்ளன என்பதை மறுக்க முடியாது. இப்போது, ​​நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் போக்கு உள்ளது.

மக்களின் மிகவும் தேவலாய்ப்படும் ஒன்றான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதத்தில் இரு முறை மட்டுமே,  நிர்ணயம் செய்யும் முறை இருந்தது.

ஆனால் இப்போது பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விலைகளை  தினசரி அடிப்படையில் நிர்ணையிக்கின்றன. அதன் விலைகளின் இன்றைய நிலவரம் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களுக்கு பின் எண்ணெய் நிறுவனங்கள் தற்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. சில நாட்கள் முன்னதாக் விலைகள் வானத்தை எட்டிவிட்டன. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் என்ற அளவிலும், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் என்ற அளவிலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இன்றைய  பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 31 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டருக்கு ரூ.102.23 ஆக விற்கப்படுகிறது. அதே போல் டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து 15 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டருக்கு ரூ. 94.39 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் பெட்ரோல் டீசல் விலைகளில் மாற்றம் எதுவும் இல்லாமல் இருந்தது. அதன் பிறகு விலைகளில் தொடர்ந்து மாற்றத்தை காணமுடிந்தது.

மேலும் படிக்க:

ஹெல்மெட் வாங்கினால் பெட்ரோல் மற்றும் முகக்கவசம் இலவசம்!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அறிவிப்பு! அமைச்சர் சக்கரபாணி!

English Summary: Petrol and diesel prices continue to rise: People in shock !! Published on: 15 July 2021, 11:11 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.