1. செய்திகள்

1 வருடம் வரை வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க மத்திய வேளாண் மந்திரி யோசனை!

KJ Staff
KJ Staff
Credit : Patrikai

வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் 6 மாதம் முதல் 1 வருடம் வரை நிறுத்தி வைக்க தயார் என விவசாய சங்க பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையில் மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 57-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஏற்கனவே பல கட்டங்களாக பேச்சுவார்த்தைகளை நடத்தி இருந்தது. ஆனால், அனைத்து கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

வேளாண் சட்டங்கள் நிறுத்தி வைப்பு:

விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசு இடையே இன்று 10-ம் கட்ட பேச்சுவார்த்தையில் வேளாண் சட்டங்களை (Agricultural Laws) முற்றிலும் திரும்பப்பெற வேண்டும் என விவசாய சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாகவும், ஒரு குழு அமைத்து விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் (Narendra Singh Tomar) யோசனை தெரிவித்துள்ளார்.

10ஆம் கட்ட பேச்சுவார்த்தை:

10-ம் கட்ட பேச்சுவார்த்தையில், விவசாயிகள் போராட்டத்தை கைவிடுவது குறித்து விவசாயிகள் இன்றே முடிவு எடுக்க வேண்டும் என மந்திரி தோமர் தெரிவித்துள்ளார். ஆனால், மத்திய மந்திரியின் யோசனை குறித்து விவசாயிகள் தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

மதுரையில் வரப்போகிறது மல்லிகை பூ ஏற்றுமதி மையம்! மத்திய அரசு ஒப்புதல்!

விளைபொருட்களுக்கு விலை கிடைக்காமல் திணறும் விவசாயிகளுக்கு, வேளாண் துறையின் ஆலோசனை!

English Summary: The idea of ​​the Central Minister of Agriculture to suspend agricultural laws for up to 1 year! (1) Published on: 20 January 2021, 09:24 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.