1. வாழ்வும் நலமும்

5 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ஆரஞ்ச் அலேர்ட்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Orange alert for 5 districts today and tomorrow!

நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கன மழைக்கான, 'ஆரஞ்ச் அலேர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

மிக கனமழை

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், பல மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யும். நீலகிரி, கோவை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று மிக கன மழை பெய்யும்.

07.09.22

நீலகிரி, கோவை, திருப்பத்துார், வேலுார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், நாளை மிக கன மழை பெய்யும்.

கனமழை

ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும். சென்னையில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தில் 10 செ.மீ., மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

லட்சத்தீவு பகுதிகள், கேரள கடற்பகுதிகள் மற்றும் அதையொட்டிய தெற்கு கடலோர பகுதிகளில் மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இன்றும், நாளையும் மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

4 வயது குழந்தைகள் வேலைக்குத் தேவை - வித்தியாசமான விளம்பரம்!

பிள்ளையாருக்கு ரூ.316 கோடிக்கு காப்பீடு!

English Summary: Orange alert for 5 districts today and tomorrow!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.