Dhanuka Agritech short film
இந்திய வேளாண் துறை சார்ந்த நிறுவனங்களில் முன்னணி வகிக்கும் Dhanuka Agritech (தனுக்கா அக்ரிடெக்), ‘ஒவ்வொரு விவசாயிக்கும் இந்தியாவின் வணக்கம்’ (’India ka Pranam, Har Kisaan ke Naam’) பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மனதைத் தொடும் குறும்படத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் உயிர்நாடியான வேளாண் துறையில் ஒரு விவசாயியாக நான் வர வேண்டும் என்று கனவு காணும் ஒரு சிறுவனின் பார்வையில் இக்குறும்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் விவசாயத் துறையின் எதிர்காலத்தைப் பற்றிய சக்திவாய்ந்த செய்தியை எளிமையாக இந்தத் திரைப்படம் கடத்துகிறது என்றால் மிகையல்ல.
இந்தியாவின் எதிர்க்காலம் விவசாயிகளின் கையில்:
கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விவசாயிகளை கௌரவிக்கும் பிரச்சாரத்தினை தொடர்ந்து, இரண்டாவது முறையாக வெளியிடப்பட்ட புதிய குறும்படத்திற்கு சமூக வலைத்தளங்களிலும், பார்வையாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறும்படத்தின் மைய கருத்தான ”இந்தியாவின் எதிர்காலம் அதன் விவசாயிகளின் கைகளில் உள்ளது” என்கிற ஆழமான செய்தி எளிமையான வடிவில் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
44 ஆண்டுகளாக இந்திய விவசாயத் துறையில் நம்பகமான நிறுவனமாக இருக்கும் தனுகா அக்ரிடெக் இந்த தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்சாரத்தின் பின்னணியில் உள்ளது. தனுகா அக்ரிடெக் நிறுவனத்தின் மூத்த துணைப் பொது மேலாளர் ரத்னேஷ் குமார் பதக் இதுக்குறித்து கூறுகையில், "இந்தப் குறும்படத்தை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த முயற்சி விவசாய சமூகத்தை உயர்த்தி கௌரவிக்க வேண்டும் என்ற எங்கள் நோக்கத்தின் தொடர்ச்சி. இந்த படத்தின் மூலம், புத்திசாலித்தனமான இளம் மனங்களால் நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை தொடர முடியாது என்ற காலாவதியான நம்பிக்கைக்கு சவால் விடுகிறோம். விவசாயம் வெறும் வாழ்வாதாரம் அல்ல. ; இது ஒரு மரபு, ஒவ்வொரு விவசாயிக்கும் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் விலைமதிப்பற்ற பங்களிப்புகளுக்கு எங்கள் ஆழ்ந்த நன்றியை வெளிப்படுத்தும் வழி இதுவாகும்” என்றார்.
பல தசாப்தங்களாக தனுகா அக்ரிடெக், இந்திய விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள், ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னால் உள்ள அயராத முயற்சியையும் புரிந்து கொண்டுள்ளது. அந்த முயற்சிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், அடுத்த தலைமுறையினர் விவசாயத்தை பெருமிதத்துடன் அரவணைக்க ஊக்குவிக்கும் விதமாகவும் இக்குறும்படம் உருவாக்கபட்டுள்ளது. இது இந்தியாவின் கட்டமைப்பில் ஒருங்கிணைந்த விவசாயத்தின் நீடித்த மதிப்புகளில் வேரூன்றிய எதிர்காலத்திற்கான நம்பிக்கையின் விதைகளை விதைக்கிறது.
இந்த குறும்படம் நாடு முழுவதும் உள்ள வீடுகளைச் சென்றடையும் போது, நாட்டிற்கு உணவளிக்கும் மக்களுக்கு ஆதரவளிப்பதில் தனுகாவின் தற்போதைய உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.
இந்த பிரச்சாரம் இன்றைய விவசாயிகளை மட்டுமல்ல, எதிர்கால விவசாயிகளையும் கொண்டாடுகிறது. விவசாயம் ஒரு தொழிலை விட மேலானது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது - இது போற்றி வளர்க்க வேண்டிய ஒரு மரபு.
Read more:
வருடத்திற்கு 4000 குவிண்டால்- உருளை சாகுபடியில் அசத்தும் உ.பி. விவசாயி !
Share your comments