1. செய்திகள்

முல்லைப் பெரியார் அணை நிலவரம்! மத்திய குழு ஆய்வு!!

Poonguzhali R
Poonguzhali R
Mullai Periyar dam situation! Central committee studay!!

முல்லைப் பெரியாறு அணையின் நிலை பாதுகாப்பாக உள்ளதாக கண்காணிப்புக் குழு ஆய்வுக்கு பின் தெரிவித்துள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவின் தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட 5 பேர், முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை மற்றும் ஷட்டர்களை நேற்று ஆய்வு செய்தனர்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவின் தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட 5 பேர், முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை மற்றும் ஷட்டர்களை திங்கள்கிழமை ஆய்வு செய்தனர். மத்திய நீர்வளக் குழுவின் தலைமைப் பொறியாளரும், மூவர் கண்காணிப்புக் குழுவின் தலைவருமான விஜயசரண் செய்தியாளர்களைச் சந்தித்து, அணையின் நிலை பாதுகாப்பாக இருப்பதாகவும், கேரளா மற்றும் தமிழகம் இடையே நீர்த்தேக்கம் தொடர்பான பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் 3 பேர் கொண்ட குழுவை நியமித்து, அந்த குழு முல்லைப் பெரியாறு அணையை அவ்வப்போது கண்காணிக்கவும் உத்தரவிட்டது. விஜயசரணைத் தவிர, நீர்வளத் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா, கேரள நீர்வளத் துறை கூடுதல் செயலர் வி.வேணு ஆகியோர் கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

சமீபத்தில், கேரள நீர்பாசன தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் மற்றும் தமிழகத்தின் காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப் பிரிவுத் தலைவர் எஸ்.சுப்பிரமணியன் ஆகியோரைத் தொழில்நுட்ப நிபுணர்களாகக் குழுவில் சேர்த்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த ஐந்து பேரும் தேக்கடிக்கு வந்து படகில் முல்லைப்பெரியாறு அணைக்கு வருகை தந்தனர். அப்பகுதியை ஆய்வு செய்து, கோடை காலங்களிலும், பின்னர் தென்மேற்கு பருவமழையின் போதும் தேவைப்படும் பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசித்தனர். இரண்டு மணி நேர ஆய்வுக்கு பின், குழுவினர் குமளிக்கு புறப்பட்டனர். அவர்கள் விரைவில் தங்கள் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள் எனக் கூறப்படுகிறது. “மேற்பார்வைக் குழு விரைவில் புது தில்லியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்தும்” என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

 TNPSC-இல் புதிய மாற்றங்கள்! அமைச்சர் அறிவிப்பு!

மக்களே நற்செய்தி! சரிந்தது தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?

English Summary: Mullai Periyar dam situation! Central committee studay!! Published on: 28 March 2023, 03:55 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.