1. செய்திகள்

புதிய தேர்தல் சீர்திருத்த மசோதா மற்றும் அதன் விவரம்

Deiva Bindhiya
Deiva Bindhiya

New Electoral Reform Bill and its details

நாட்டில் தேர்தல் சீர்திருத்தத்துடன் இணைக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. 'தேர்தல் சட்ட திருத்த மசோதா 202l' (Election Act Amendment Bill 2021) மக்களவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு பிறகும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மூலம் , மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950 அதாவது (Representation of the People Act 1950), 1951 ஆகியவற்றில் திருத்தம் செய்ய  முன்மொழியப்பட்டுள்ளது. மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான இந்த மசோதாவின் வரைவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதாவின் வரைவில் வாக்காளர் பட்டியலில் நகல் மற்றும் போலி வாக்குப்பதிவை தடுக்கும் வகையில் வாக்காளர் அட்டை மற்றும் பட்டியல் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மசோதாவின்படி, தேர்தல் சட்டம் இராணுவ வாக்காளர்களுக்கு பாலின நடுநிலையாக மாற்றப்படும்.

1.அதார் அட்டை, குடியுரிமை அடையாள அட்டையாக அல்ல இருப்பிடச் சான்றாகக் கொண்டு வரப்பட்டதாகும் என   எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டின. அவ்வாறு இருப்பின், வாக்காளிரிடம் ஆதார் அட்டை கேட்டால், வாக்காளர் வசிக்கும் இடம் குறித்த தகவல்கள் மட்டுமே இதில் கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் இந்த நேரத்தில் நாட்டில் வசிக்காதவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்குகிறீர்கள்.

2.புதிய மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, பகுஜன் சமாஜ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

3.ஒய்எஸ்ஆர் காங்கிரஸும் இந்த மசோதாவை மறுஆய்வு செய்து விவாதிக்க வேண்டும் என்று கோரியுள்ளது. விவாதத்திற்குப் பிறகு, இந்த மசோதாவை இன்னும் விரிவான வடிவத்தில் அரசு கொண்டு வர வேண்டும் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கூறியுள்ளது.

4.இந்த மசோதாவை மக்களவையில் கொண்டு வந்து நிறைவேற்றிய விதத்திற்கு நவீன் பட்நாயக்கிந் பிஜு ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

5.உண்மையில் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான இந்த மசோதாவின் வரைவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதாவின் வரைவில் வாக்காளர் பட்டியலில் நகல் மற்றும் போலி வாக்குபதிவை தடுக்கும் வகையில் வாக்காளர் அட்டை மற்றும் பட்டியல் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

6.மசோதாவின் படி, தேர்தல் தொடர்பான சட்டம் இராணுவ வாக்காளர்களுக்கு பாலின நடுநிலையாக மாற்றப்படும்.

7.தற்போதைய தேர்தல் சட்டத்தின் விதிகளின்படி, எந்தவொரு படைவீரரின் மனைவியும் இராணுவ வாக்காளராகப் பதிவுசெய்ய தகுதியுடையவர், ஆனால் ஒரு பெண் சேவையாளரின் கணவர் தகுதியற்றவர். முன்மொழியப்பட்ட மசோதா நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றவுடன் விஷயங்கள் மாறும்.

8.தகுதியானவர்களை வாக்காளர்களாகப் பதிவு செய்ய பல 'கட் ஆஃப் டேட்'களை தேர்தல் ஆணையம் வாதிட்டு வருகிறது.

9.இப்போது புதிய மசோதாவில், வாக்காளர் பதிவுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நான்கு 'கட்-ஆஃப் தேதிகள்' - திருத்தம் முன்மொழிகிறது என்று கூறப்பட்டுள்ளது.

10.முன்னதாக மார்ச் மாதம், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அப்போதைய சட்ட அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அமைப்பை இணைக்க தேர்தல் ஆணையம் முன்மொழிந்துள்ளது, இதனால் ஒருவர் வெவ்வேறு இடங்களில் பல முறை பதிவு செய்ய முடியாது என சுட்டிக்காட்டினார்.

மேலும் படிக்க:

உரம் விற்கும் 88 கடைகளின் உரிமம் ரத்து,காரணம் என்ன?

அரசு கண்டிப்பு: இரண்டு பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்க தடை

English Summary: New Electoral Reform Bill and its details

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.