1. செய்திகள்

200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் களைக்கட்டிய MFOI Samridh Kisan Utsav

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
MFOI Samridh Kisan Utsav at Kondagaon

MFOI சம்ரித் கிசான் உத்சவ் நிகழ்வானது விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதையும், வளமான இந்தியாவின் வளர்ச்சிக்கு வேளாண் பங்களிப்பினை உறுதி செய்வதையும் முதன்மை நோக்கமாக கொண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கிரிஷி ஜாக்ரன் முன்னெடுப்பில் நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில், இன்றைய தினம் சத்தீஸ்கரில் வெகு விமர்சையாக நிகழ்வு நடைப்பெற்றது.

சத்தீஸ்கர் மாநிலம் கோண்டகானில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில், மஹிந்திரா டிராக்டர்ஸ் மற்றும் ACE ஆதரவுடன் நடைப்பெற்ற MFOI சம்ரித் கிஷான் உத்சவ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வேளாண் துறை வல்லுநர்கள் வருமானத்தை அதிகரிப்பது பற்றிய நுண்ணறிவை விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.

மில்லினியர் விவசாயிகள் கௌரவிப்பு:

இந்நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினர்களாக போஜ்ராஜ் நாக், (கான்கர் எம்.பி.,) மற்றும் நீலகண்ட தேகம், (எம்.எல்.ஏ, கேஷ்கல், சத்தீஸ்கர்) ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டனர். இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) சார்பில் வேளாண் விஞ்ஞானிகள் விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த நுண்ணறிவினை வழங்கினர்.

கோண்டகான் கேவிகே மூத்த விஞ்ஞானி மற்றும் தலைவர் டாக்டர் ஓம் பிரகாஷ் வரவேற்புரை ஆற்றினார. க்ரிஷி ஜாக்ரனின் ஹிந்தி துறையின் உள்ளடக்கத் தலைவர் விவேக் குமார் ராய் நிகழ்ச்சியை கோடிட்டு, கிரிஷி ஜாக்ரனின் சம்ரித் கிசான் உத்சவ் நிகழ்வு மற்றும் மில்லினியர் விருது முன்னெடுக்கப்பட்டதற்கான நோக்கத்தை விளக்கினார்.

டாக்டர் ராஜா ராம் திரிபாதி, (இந்தியாவின் பணக்கார விவசாயி- RFOI) பங்கேற்பாளர்களிடையே நம்பிக்கையை வளர்க்கும் ஒரு ஊக்கமளிக்கும் வெற்றிக் கதையைப் பகிர்ந்து கொண்டார். மற்ற குறிப்பிடத்தக்க விருந்தினர்கள் தேவசந்திர மட்லம், (மாவட்ட பஞ்சாயத்து தலைவர்) குணால் துடாவத், (கோண்டகான் கலெக்டர்) பிரமிளா மார்க்கம், (விவசாய நிலைக்குழு தலைவர்)  ஆகியோரும்  நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.

மஹிந்திரா டிராக்டரின் உதவிப் பகுதி மேலாளர் சிரஞ்சீவி குமார் , மேம்பட்ட வேளாண் இயந்திரங்களின் திறனை விவசாயிகள் மத்தியில் எடுத்துரைத்தார். செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட சமீபத்திய மஹிந்திரா டிராக்டர் மாடல்களை விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தப்பட்டது.

ACE இன் உதவி மேலாளர் லலித் சாஹு, ACE-யின் விவசாய உபகரணங்களைப் பற்றிய தகவலை வழங்கினார், மேலும் ACE தயாரிப்புகளை வாங்குவதற்கான அம்சங்கள் மற்றும் மானியங்களை வலியுறுத்தினார். ACE ஸ்டால்கள் புதிய இயந்திரங்களைக் காட்சிப்படுத்தியது, இந்த கருவிகள் விவசாயத்தை எவ்வாறு எளிதாக்கலாம் என்பது பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகின்றன.

விவசாய சமூகத்தை மேம்படுத்துவதற்கும் நிலையான விவசாய நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட வெற்றிகரமான நாளைக் குறிக்கும் வகையில், டாக்டர் பிரியா சின்ஹாவின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

MFOI 2024- விண்ணப்பங்கள் வரவேற்பு:

MFOI 2023- நிகழ்வினைத் தொடர்ந்து, Millionaire Farmer of India Awards 2024- நிகழ்வுக்கு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்வில் ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளதாகவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. MFOI விருதுகள் 2024- நிகழ்வானது, டிசம்பர் 1 முதல் டிசம்பர் 3,2024 வரை டெல்லியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more:

மழையின் போது வெளிவரும் மண்வாசனை- இது தான் காரணமா?

கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு!

English Summary: Over 200 Farmers participation in MFOI Samridh Kisan Utsav at Kondagaon Published on: 14 June 2024, 06:26 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.