1. செய்திகள்

கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு ரூ.14,815 வரை சம்பள உயர்வு- தமிழக அரசு அறிவிப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Salary hike for co-operative society employees up to Rs.14,815!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இது தொடர்பாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் .இ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

23% வரை

கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 112 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் 01.01.2020 ந் தேதியில் இருந்த சம்பள உயர்வு குறித்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அவர்களது கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த அரசு அவர்களுக்கான 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தப்படும் ஊதிய உயர்வினை தற்போது அறிவித்துள்ளது.

அதன்படி 01.01.2020 முதல் ஊதிய உயர்வு வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. சங்கங்களின் வகைப்பாட்டிற்கு ஏற்ப 23% வரை ஊதியம் அதிகரித்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஊதிய உயர்வினால் பணியாளர்களுக்கு குறைந்த பட்சமாக ரூ.2,259/-ம், அதிகபட்சமாக ரூ.14815/-ம் ஊதிய உயர்வு கிடைக்கும். இவற்றின் மூலம் வேளாண்மை உற்பதியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பணிபுரிந்து வரும் 1675 பணியாளர்கள் பயன் பெறுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

எரிவாயு சிலிண்டர் விலை ரூ.187 குறைந்தது!

7 டன் ரசாயன மாம்பழங்கள் - அதிரடி பறிமுதல்!

English Summary: Salary hike for co-operative society employees up to Rs.14,815!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.