1. செய்திகள்

TNPSC குரூப் 5ஏ தேர்வு: வெளியானது அறிவிப்பு!

Poonguzhali R
Poonguzhali R
TNPSC Group 5A Exam: Notification Released!

TNPSC குரூப் 5 ஏ தேர்வுக்கு இன்று முதல் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை விண்னப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களைத் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகின்றது. அந்த நிலையில் குரூப் 5-ஏ தேர்விற்கான அறிவிப்பாணையினைத் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர், உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 161 இடங்களை நிரப்ப குரூப் 5-ஏ தேர்வு நடைபெற உள்ளது.

குரூப் 5-ஏ இன்று முதல் வரும் செப்டம்பர் 21-ஆம் நாள் வரை விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் எனில் செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது. தேர்வானது திசம்பர் 18-ஆம் நாள் எழுத்துத்தேர்வு முறையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

தமிழகத்தில் 37,450 வேலைவாய்ப்புகள்: அரசு ஒப்பந்தம்!

விவசாயிகளுக்குப் பயிர் காப்பீடு அறிவிப்பு! ரூ.2000 கோடி ஒதுக்கீடு!!

English Summary: TNPSC Group 5A Exam: Notification Released! Published on: 23 August 2022, 03:46 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.