மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Agripedia

Thursday, 27 August 2020 12:29 PM , by: Daisy Rose Mary
Farmer

குறைந்து வரும் பண்ணை வேலையாட்கள், பெருகி வரும் மக்கள் தொகை, பொருளாதார பற்றாக்குறை உள்ளிட்ட காரணிகளால் வேளாண்துறையில் இயந்திர மயமாக்குதல் என்பது அவசியமாகிறது. மாறி வரும் நவீன உலகிற்கு ஏற்ப வேளாண் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டியதும் அவசியமாகிறது.

இயந்திரமயமாக்கலின் தேவை என்ன ? need for mechanization?

உணவுக்கான உலகளாவிய தேவை அதிகரித்து வருவது வேளாண்மைக்கு ஒரு மிக பெரிய சவாலாக இருக்கும். நவீன வேளாண்மையே உணவுத் தேவையை அதிகரிப்பதற்கான முக்கிய பங்காற்றுகிறது. நவீன வேளாண்மையில் இயந்திரமயமாக்கல் ஒரு முக்கிய பங்காகும். இது உற்பத்தித்திறனை மேம்படுத்துகிறது, மனித உழைப்பின் தேவையையும் சாகுபடி செலவையும் குறைக்கிறது.

இயந்திரமயமாக்கலால் வேளாண் தொழிலாளியின் பாதுகாப்பு உறுதிசெயப்படுகிறது, விளைபொருட்களின் தரம் மற்றும் மதிப்பு கூட்டல் மேம்பாடுகளுக்கும் உதவுகிறது. உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க திறமையான இயந்திரங்கள் உதவுகின்றன, இவற்றின் மூலம் விவசாயிகளுக்கு இரண்டாவது பயிர் அல்லது பல பயிர்களை வளர்க்க உதவுகிறது, இதன்‌ மூலம் விவசாயி தன் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கைமுறையும் மேம்படுத்திக் கொள்ள முடிகிறது.

நவீன பண்ணைக் கருவிகள்

இன்றைய நிலையில் இந்தியாவில் 7.5 லட்சம் நீர் இறைக்கும் பம்புகளும், 6 லட்சம் டிராக்டர்களும், 60000 பவர் டில்லர்களும், 4 லட்சம் கதிரடிக்கும் இயந்திரங்களும், 4.5 லட்சம் தெளிப்பான்களும், 2000 கூட்டு அறுவடை இயந்திரங்களும் என ஆண்டு ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

நம்நாட்டு வேளாண்மைக்கு தகுந்தவாறு பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள், வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் வாயிலாக பெரும்பாலான கருவிகள் நம் விவசாயிகள் பயன்படுத்த பெரிதும் வழிவகை செய்கின்றன.

பண்ணைக் கருவிகளுக்கான அரசு மானியம் 

தமிழகத்தில், விவசாயிகளின் வருமானத்தையும், வேளாண்மை உற்பத்தியையும் அதிகரித்திட வேளாண்மை பெறியியல் துறை மூலம் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தை (Government subsidy for farm implements) ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தி வருகிறது. இதனால் பண்ணை பணியாளர்களின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டு, வேளாண் இயந்நிரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் வழங்குவதும், புதிய இயந்திரங்களை மற்றும் கருவிகளை விவசாயிகளிடையே பிரபலபடுத்துவதும் மேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தின் செயல்பாடுகளாகும்.

வேளாண்மை இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டம்

மத்திய அரசுடன் இணைந்து சென்னை நீங்கலாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வேளாண்மை இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டம் (Sub Mission on Agricultural Mechanization) நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் மத்திய அரசு 60 சதவீதமும் , மாநில அரசு 40 சதவீதம் என்ற அடிப்பயில் பங்களிப்பாக உதவிகளை செய்து வருகிறது.

 

இந்த திட்டத்தின் மூலம் பண்ணை சக்தி குறைவாக உள்ள இடங்களில், சிறு மற்றும் குறு விவசாயிகளிடையே வேளாண்மை இயந்திரமயமாக்குதலை ஊக்குவித்தல் மற்றும் வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்களை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாடகைக்கு வழங்குதல் உள்ளிட்டவை நேக்கமாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் (SMAM) மூலம் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளான டிராக்டர் சுழற்கலப்பை, பவர்டில்லர், நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரம் , விசைக்களையெடுப்பான், தட்டை வெட்டும் கருவி, புதர் அகற்றும் கருவி மற்றும் பல்வகைப்பயிர் கதிரடிக்கும் இயந்திரம் ஆகியவற்றினை தனிப்பட்ட விவசாயிகள் வாங்குவதற்கும், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் அமைப்பதற்கும் அரசு மானியம் வழங்குகிறது.

மானியமும் சலுகைகளும் - Subsidy Details

  • வேளாண் இயந்திரங்கள் / கருவிகள் வாங்குவதற்கு இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத்தொகை இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்

  • ஆதி திராவிடர், பழங்குடியினர், சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத்தொகை இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாகவும் வழங்கப்படுகிறது.

  • விவசாயிகள் / விவசாயக் குழுக்கள் / தொழில் முனைவோர்கள் ஆகியோர்கள் வட்டாரஅளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் நிறுவுவதற்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

  • விவசாயக் கூட்டுறவு சங்கங்கள் / விவசாய சுய உதவிக்குழுக்கள்/ உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் / இதுபோன்ற அமைப்புகளுக்கு கிராம அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை (மையம்) வங்கிகளை ஏற்படுத்திட 80 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

  • வேளாண்மை பொறியியல் துறையால் அங்கீகாரம் மற்றும் ஒப்புதல் வழங்கப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து விவசாயிகள், விவசாய குழுக்கள், தொழில் முனைவோர்கள் தங்களுக்கு தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் வகைகள் மற்றும் மாடல்களை விவசாயிகளின் விருப்பத்தின்படி தேர்வு செய்து கொள்ளலாம்.

தகுதிகள்

தனிப்பட்ட விவசாய இயந்திரங்களை அனைத்து விவசாயிகளும் கொள்முதல் செய்யலாம்.

வட்டார அளவில் வேளாண் இயந்திரங்கள் / கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் நிறுவுவதற்கு - விவசாயிகள்/ விவசாயக் குழுக்கள்/ தொழில் முனைவோர்களாக இருக்கவேண்டும்

கிராம அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்களை அமைப்பதற்கு விவசாயக் கூட்டுறவு சங்கங்கள் / விவசாய சுய உதவிக்குழுக்கள்/ உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் உள்ளிட்ட கிராம அமைப்புகளாக இருந்தல் வேண்டும்.

உழவன் செயலி

தனி விவசாயிகள் உழவன் செயலி மூலம் (Uzhavan APP) மானிய விலையில் இயந்திரங்ளை பெற வழிவகை செய்யப்படுள்ளது. இதன் மூலம் அவர்களின் விண்ணப்பங்கள் மத்திய அரசின் இணையதளமான www.agrimachinery.nic.in உடன் இணைக்கப்படும் பின்னர் இயந்திரங்களை மானிய விலையில் பெறுவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.

மானிய நடைமுறைகள்

வேளாண் இயந்திரங்களை பெறும் விவசாயிகள் முதலில் இயந்திரத்திற்கான முழு தொகையை செலுத்தி இயந்திரங்களை வாங்க வேண்டும், அதன் பின்பே மானியம் அவர்களுக்கு வழங்கப்படும்.

இந்த மானியமானது விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இதனால் வேளாண் இயந்திரங்களில் நடைபெறும் முறைகேடு மற்றும் பிரச்சனைகள் தவிற்கப்படும்.

Related