மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 November, 2021 8:42 PM IST
1$ For 1 Thirukural

புதுக்கோட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி, அமெரிக்காவில் தமிழ் பள்ளி நடத்தி,திருக்குறள் (Thirukural) பாடத்துக்கு பரிசுகள் வழங்கி அசத்தி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம், ராயவரத்தைச் சேர்ந்தவர் ராமன் வேலு. பொறியியலில் இளங்கலை பட்டம், வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.

தமிழ்ப் பள்ளி

சிறப்பான பங்களிப்புக்காக, கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றுஉள்ளார். மனைவி விசாலாட்சியுடன், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலம், டல்லாஸ் நகரில் தங்கி, சாஸ்தா தமிழ் அறக்கட்டளை, பிளோனோ தமிழ் பள்ளி ஆகியவற்றை ராமன்வேலு நடத்தி வருகிறார்.

இவர்கள் பள்ளியில் தமிழ் கற்றுக் கொடுக்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் மீது கொண்ட பற்று காரணமாகவும், திருக்குறள் மீதுள்ள ஈர்ப்பு காரணமாகவும் ஒரு திருக்குறள் கூறினால் 1 டாலர் பரிசு என அறிவித்து, ஆண்டுதோறும் போட்டி நடத்தி வருகிறார். இவர் நடத்தும் பள்ளியில் 400 மாணவர்கள் திருக்குறள் கற்று வருகின்றனர்.

எதிர்பார்ப்பு

என் மனைவியின் சகோதரி மூலமாக அமெரிக்காவுக்கு 2013ம் ஆண்டு வந்து, ஐ.பி.எம்., நிறுவனத்தில் 'சீனியர் கன்சல்டன்ட்' மற்றும் பல்வேறு நிறுவனங்களில் மனிதவள அதிகாரியாக பணியாற்றினேன். நாங்கள் நடத்திவரும் பள்ளியில் 1,330 திருக்குறள்களில்
ஒன்றையாவது, பொருளுரையுடன் கூறினால் 1 டாலர் பரிசு என அறிவித்து செயல்படுத்தி வருகிறேன். இது நல்ல வரவேற்பை பெற்றது.

இப்போதுஅமெரிக்கா மட்டுமின்றி, உலக அளவில் இந்த போட்டியை நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழர்களிடையே உருவாகி உள்ளது என்று ராமன் வேலு அவர்கூறினார்.

"மனநிறைவுடன் வாழ ஏழு வழிகள்" என்ற புத்தகத்தையும் அவர் எழுதியுள்ளார். இவரது மகன், மகள் ஆகியோரும், தந்தை வழியில் தன்னார்வ பணிகள், தமிழ் ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க

இனி நேரடி வகுப்புகள் தானாம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தயாரிப்பு பற்றி தகவல் அளிப்பவருக்கு வெகுமதி!

English Summary: $ 1 prize for a Thirukural: Pudhugai Engineer Stunning!
Published on: 25 November 2021, 08:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now