மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 21 July, 2021 9:06 AM IST
Credit : Maalaimalar

தனது மகளை சந்தோஷமாகப் பாத்துக்கொள்ளும் மருமகனுக்கு, இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், 10 ஆடுகள், ஆயிரம்கிலோ மீன், 250 கிலோ இறாலுடன் மாமனார் சீர் அளித்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆடிச்சீர்

புதுமண தம்பதிகளுக்கு ஆடிமாதம் சீர் கொடுத்து கொண்டாடுவது தமிழர்களின் வழக்கமாகும். இதன்படி ஆடிமாதத்தில், பெண்ணையும், மாப்பிள்ளையையும் வீட்டிற்கு அழைத்து வந்து, புத்தாடை, பொன் நகை, வழங்கி, அசைவ உணவுகளை சமைத்துப் போட்டு விருந்து படைப்பார்கள். மாப்பிள்ளைக்கு ஆடிச்சீர் கொடுத்து அனுப்புவதும் வழக்கத்தில் உள்ளது.

ஆஷாதம் விழா (Ashadam Festival)

இதேபோல தெலுங்கு பேசும் மக்கள் ஆண்டுதோறும் ஆஷாதம் மாத விழாவை கொண்டாடுகின்றனர். இது பெனாலு என்ற பாரம்பரிய நாட்டுப்புற விழாவாக ஜூன், ஜூலை மாதத்தில் கொண்டாடப்படும்.

அந்தவகையில் புதுவை மாநிலத்தின் ஏனாம் பிராந்தியத்தில் ஆஷாதம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவையொட்டி ஏனாமை சேர்ந்த பவன் குமார் என்பவருக்கு, ராஜமுந்திரியை சேர்ந்த அவரது மாமனார் பலராம கிருஷ்ணா வித்தியாசமான முறையில் சீர் கொடுத்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளனர். அந்த சீர் என்ன தெரியுமா?

அசத்தல் சீர் (Asathal Seer)

ஆயிரம் கிலோ மீன், 200 கிலோ இறால், 10 ஆடு, 50 கோழி, ஆயிரம் கிலோ காய்கறி, 250 கிலோ மளிகை பொருட்கள், 250 கிலோ ஊறுகாய், 50 வகை இனிப்புகள் என வண்டி, வண்டியாக ஊர்வலமாக சீர் வைத்தார். இதை அப்பகுதி மக்கள் மிகுந்த வியந்து போனார்கள். .

மகிழ்ச்சி வெளிப்படுத்த சீர் (Tune in to express happiness)

இதுகுறித்து பலராமகிருஷ்ணா கூறும்போது, தனது மகள் பிரத்யுஷாவுக்கும், பவன்குமாருக்கும் கடந்த மாதம் 21-ந்தேதி திருமணம் நடந்தது. தனது மகளை, மருமகன் நன்றாக கவனித்துக்கொள்வதால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் இந்த சீர்வரிசையை வழங்கியதாத் தெரிவித்தார்.

சீராக ஆடுகள் (Goats evenly)

திருமணமாகிச் செல்லும் பெண்பிள்ளைகளுக்கு ஆடுகளை சீராகப் கொடுக்கும் வழக்கமும் தமிழிர்களிடையே இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

மகன் மத்திய அமைச்சர்- தந்தை விவசாயி!

ஆன்லைன் வகுப்புக்காக அல்லாடும் மாணவர்கள் - குடிநீர் தொட்டி மீது ஏறி பங்கேற்கும் கொடுமை!

English Summary: 10 goats, a thousand kilos of fish adi seer- Strange uncle!
Published on: 21 July 2021, 09:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now