பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 22 November, 2022 9:36 AM IST

இல்லரசிகளுக்கு இனிப்பான செய்தியை வெளியிட்டுள்ளது இந்த மாநில அரசு. அதாவது ஆண்டுக்கு 2 சிலிண்டர்கள் இலவசம் என்பதுதான் அந்த அசத்தல் அறிவிப்பு.

பொதுமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. நாடு முழுவதும் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிலிண்டரே வாங்க வேண்டாம் என்ற நிலைக்கு நிறையப் பேர் வந்துவிட்டனர். இந்நிலையில் இலவச சிலிண்டர் உங்களுக்கு கிடைத்தால் எப்படி இருக்கும்? ஹோலி பண்டிகையன்று உங்களுக்கு 2 கேஸ் சிலிண்டர்களை இலவசமாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

யாருக்கு கிடைக்கும்?

அரசின் இந்த இலவச சிலிண்டர் அனைவருக்கும் இல்லை. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் அரசாங்கம் இலவச எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அதற்கு மானியம் வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு மட்டுமே இலவச சிலிண்டர் சலுகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

​அரசு பரிசீலனை

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு மாநில அரசிடமிருந்து இந்த பரிசு கிடைக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் உணவு மற்றும் வழங்கல் துறை, இலவச காஸ் சிலிண்டர்களை வழங்குவதற்கான பரிந்துரையை நிதித்துறைக்கு அனுப்பியுள்ளது. இதற்கு, அரசிடமிருந்து பட்ஜெட் ஒதுக்கப்பட்ட பிறகு இலவச கேஸ் சிலிண்டர் விநியோகம் துவங்கும்.

விரைவில் பரிசு

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிஜேபி அரசு தயாராகி வருகிறது. இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி உஜ்வாலா திட்டத்தின் கீழ் இந்த முறை ஹோலி பண்டிகையன்று பொதுமக்களுக்கு ஒரு இலவச சிலிண்டர் வழங்கப்படும். மேலும் தீபாவளியன்று இரண்டாவது இலவச சிலிண்டர் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

கூடுதல் செலவு

மாநில அரசின் இந்த இலவச சிலிண்டர் வசதியின் மூலம் நாடு முழுவதும் சுமார் 1.65 கோடி பயனாளிகள் பயன்பெறுவார்கள். இலவச சிலிண்டருக்கு அரசுக்கு சுமார் 3000 கோடி ரூபாய் நிதிச்சுமை ஏற்படும் என்பதைச் சொல்கிறோம்.

மேலும் படிக்க...

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சயனைடை விட 6,000 மடங்கு - அதிக நச்சுள்ள உலகின் கொடிய தாவரம்!

English Summary: 2 cylinder free for all - Govt super scheme!
Published on: 22 November 2022, 09:34 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now