சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 18 June, 2022 9:25 AM IST

தவறான இடங்களில் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்பட்டதை போட்டோ எடுத்து அனுப்புவோருக்கு, 500 ரூபாய் சன்மானம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடித்தால், விபத்துக்களைத் தவிர்க்கலாம். ஆனால், சாலைகளில் வாகனம் ஓட்டுவதில் ஆர்வம் காட்டுவோர், போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிப்பதில் மெத்தனம் காட்டுகின்றன.

அதிகரிக்கும் விபத்து

இது மட்டுமல்ல, பார்க்கிங் இல்லாத இடங்களில்கூட வாகனங்களை நிறுத்திவிட்டு, விபத்துக்கு வழிவகுக்கின்றனர். இதனைப் போக்கும் வகையில், சாலைப் போக்குவரத்து அமைச்சகம் புதியத்திட்டத்தை வகுத்துள்ளது.

புதியத் திட்டம்

அதாவது சாலையோரங்களிலும் தெருக்களிலும் தேவையற்ற இடங்களில் அல்லது அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதையும், அதன் மூலம் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், விபத்து போன்றவற்றைக் கட்டுப்படுத்தவும் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முடிவுசெய்துள்ளது.

தவறான இடங்களில் நிறையப் பேர் வாகனங்களை பார்க்கிங் செய்துவிட்டுச் செல்வதைத் தடுக்க, தவறான பார்க்கிங் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கும் சன்மானம் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

அதாவது, தவறான இடங்களில் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்பட்டதை பொதுமக்கள் யாராவது பார்த்தால் அதை போட்டோ எடுத்து அரசுக்கு அனுப்பினால் அவர்களுக்கு 500 ரூபாய் ரிவார்டு வழங்கப்படும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் முறையற்ற பார்க்கிங் கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க...

மனைவி பெயரில் வீடு கட்ட சலுகை-எஸ்பிஐ அறிவிப்பு!

புற்றுநோயை வரவழைக்கும் அன்றாடப் பழக்கங்கள்!

English Summary: 500 rupees reward for sending photo - Central Government's new scheme?
Published on: 18 June 2022, 09:25 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now