பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 8 July, 2022 8:23 AM IST

ஆசிரியர் பணி அறப்பணி என்று கூறுவார்கள். ஏனெனில் ஆசிரியர்கள்தான் நம் எதிர்கால சந்ததியை சொதுக்கும் சிற்பியாகச் செயல்படுகின்றனர்.
அந்த வகையில், பீஹார் கல்லூரி ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு சரியாக பாடம் எடுக்காமல் சம்பளம் வாங்க தன் மனசாட்சி அனுமதிக்கவில்லை எனக்கூறி தன்னுடைய 33 மாத சம்பளமான ரூ.24 லட்சத்தை திருப்பி அளித்துள்ளார்.

வேலை பார்த்துவரும் பலரும் சம்பளம் வந்தால் போதும் என்று எண்ணுவர். வெகு சிலரே, வாங்கும் சம்பளத்திற்கு நேர்மையாகவும், நியாயமாகவும் பணியாற்றுவர்.

உதவிப் பேராசிரியர்

அப்படி, பீஹாரில் ஆசிரியர் ஒருவர், தான் சரியாக பாடம் எடுக்கவில்லை எனக்கூறி தனது மூன்று ஆண்டு சம்பளத்தை திருப்பி அளித்துள்ளார். பீஹார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் ஹிந்தி உதவிப் பேராசிரியராக கடந்த 2019 செப்டம்பர் முதல் பணியாற்றியவர் லாலன் குமார்.

ரூ.23 லட்சம்

இக்கல்லூரி, பி.ஆர்.அம்பேத்கர் பீஹார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. லாலன் குமார் பணியில் சேர்ந்த நாள் முதல் இதுவரை கிட்டத்தட்ட ரூ.24 லட்சம் சம்பளமாக பல்கலைக்கழகத்திடம் இருந்து பெற்றுள்ளார்.
இந்த நிலையில் அவர் தான் பெற்ற சம்பளமான ரூ.23,82,228க்கான காசோலையை பல்கலைக்கழக துணை வேந்தருக்கு கடிதத்துடன் திருப்பி அளித்துள்ளார்.

இது தொடர்பாக லாலன் குமார் கூறுகையில், மாணவர்களுக்கு சரியாக பாடம் எதுவும் எடுக்காமல் சம்பளம் வாங்க என் மனசாட்சி அனுமதிக்கவில்லை. கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளின்போதும், ஹிந்தி வகுப்புகளுக்கு ஒரு சில மாணவர்கள் மட்டுமே வந்தனர். என்னுடைய எண்ணம் சிறப்பாக இருந்த போதிலும், என்னால் என் கடமைகளை சரிவர ஆற்ற முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மனசாட்சியுடன்

இந்த சூழ்நிலையில், சம்பளத்தை ஏற்றுக்கொள்வது தார்மீக ரீதியாக சரியாக இருக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். மனசாட்சி அனுமதிக்காமல் தன் சம்பளத்தை திருப்பி அளித்த ஆசிரியருக்கு பலரும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மேலும் படிக்க...

சரிவில் தங்கம் விலை- 2 நாட்களில் ரூ.1,064 குறைந்தது!

காணாமல் போன 1.50லட்சம் ரூபாய் பேனா- வலைவீசும் போலீஸ்!

English Summary: A conscientious teacher who returned 33 months' salary of Rs. 24 lakh!
Published on: 07 July 2022, 10:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now