மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 November, 2019 4:17 PM IST

ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளையும், மானியங்களையும் வழங்கி வருகிறது.   குறிப்பாக தமிழகத்தில், உணவு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பயிர்களின் சாகுபடியை அதிகரிப்பதற்கு, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மத்திய, மாநில அரசுகள் வாயிலாக செயல் படுத்தப் படும் திட்டங்கள் விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள், பாசன கருவிகள்,  நுண்ணுாட்ட சத்துக்கள், நுண்ணீர் பாசன கட்டமைப்புகள், கால்நடைகள்போன்றவற்றை  இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்கி வருகின்றன. மேலும் விவசாயிகளுக்கு 'பென்ஷன்' திட்டம், உதவித் தொகை என மத்திய அரசால் அறிமுக படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நல திட்டங்கள் அறிமுக படுத்தப்பட்ட போதிலும் ஒரு சில மாவட்டங்களில் முழுமையாக சென்றடையவில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. அரசு வழங்கும் முழு நிதியை செலவிடுவதில்லை என்றும்,  தகுதியான பயனாளிகளை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துவதில்லை என்றும் பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. 

வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இயக்குனர் தட்சிணாமூர்த்தி, தோட்டக்கலைத் துறை இயக்குனர் சுப்பையன் உள்ளிட்ட பல்வேறு வேளாண் உயர் அதிகாரிகள்  கலந்து கொண்டார். இதில் பங்கேற்ற அதிகாரிகளிடம் நல திட்டங்கள், சாகுபடி திட்டங்கள் அனைத்தும்  தாமதப்படுத்தாமல், விரைவுவில் பயனாளிகளுக்கு சென்றடைய உத்தரவிட்டுள்ளார்.

English Summary: Agricultural Production Commissioner and Principal Secretary had discussion with higher officials
Published on: 28 November 2019, 04:08 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now