Blogs

Wednesday, 29 April 2020 07:26 PM , by: Anitha Jegadeesan

விவசாயிகள் மட்டுமல்லாது பொதுமக்கள் அனைவரும் வீணாகும் மழை நீரை பண்ணைக்குட்டைகளில் சேகரிப்பதன் மூலம், நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது என வேளாண்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. இதனால் தென்னை மற்றும் காய்கறி சாகுபடிகள் பெருமளவு பாதித்துள்ளது. எனவே தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். அரசின் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், அனைத்து மாவட்டங்களிலும் பண்ணைக்குட்டைகள் அமைக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விளைநிலங்களில், புதிய பண்ணைக் குட்டைகளை அமைத்தல், பழைய நீர்நிலைகளை தூர் வாருதல், புதிய நீர்நிலை ஆதாரங்களை உருவாக்குவதால், மழை நீர் சேமிக்கப்படுத்தல் போன்ற நடவடிக்கை மூலம் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும். மேலும் நீர்வள துறை மழை நீர் சேமிப்பதற்கான கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)