மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 21 November, 2019 12:09 PM IST

சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன் பெறும் வகையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாடகைக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது. இதற்காக வட்டார அளவிலான வாடகை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நிகழாண்டில் மேலும் 304 மையங்களை அமைக்க தமிழக அரசு ரூ.30.40 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 1,510 வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகளின் வேளாண் இயந்திர தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கான வாடகை மையங்களை வட்டார வேளாண் பொறியியல் துறையினர் அமைத்து வருகின்றனர். இது போன்ற வாடகை மையங்களை அமைக்க விரும்பும் நபர்களுக்கு அரசு 40% மானியத்தில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை தருகிறது. இந்தத் திட்டம் குறித்த முழு விவரங்களை மூன்று வழிகளில் பெறலாம்

  • உழவன் செயலியில், ‘மானியத் திட்டங்கள்’ எனும் பகுதியில் ‘வேளாண் இயந்திர வாடகை மையம்’ என்ற பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்.
  • தங்களது வருவாய் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தை அணுகி விவரங்களை பெறலாம்.
  • சென்னை நந்தனத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை 044- 2951 5322, 2951 0822, 2951 0922 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு  விவரங்களை பெறலாம்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Agriculture Engineering Department announced 40% subsidy for agriculture machines and equipments centre
Published on: 21 November 2019, 12:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now