மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 September, 2022 9:35 PM IST

விமானப் பயணம் என்பதே நம்மில் பலருக்குக் கனவாக இருக்கும். ஏனெனில், அதற்கு நாம் அதிகத் தொகையை செலவிட வேண்டியிருப்பதால், விமானப் பயணம் அரிய ஒன்றாகவேக் கருதப்படுகிறது. ஆனால் அதே டிக்கெட்டுகள் இலவசமாகக் கிடைத்தால்.  ஆம், 50 லட்சம் விமான டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என ஏர் ஏசியா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சுற்றுலாப் பயணிகளை உற்சாக வானில் மிதக்க வைத்துள்ளது.

குறைந்த விலைக்கு விமான டிக்கெட் கிடைப்பது என்பது மிகவும் சவால் நிறைந்த விஷயமாகும். ஆனால் உங்களுக்கு விமான டிக்கெட் இலவசமாகக் கிடைத்தால் எப்படியொரு சந்தோஷம் பெருக்கெடுக்கும். நினைத்துப்பார்க்கவே வியப்பாக உள்ள இந்த அனுபவத்தை உங்களுக்குக் கொடுக்க முன்வந்துள்ளது Airasia நிறுவனம்.

50 லட்சம் டிக்கெட்டுகள்

ஆமாம், இலவசமாகவே விமான டிக்கெட் வழங்குவதற்கான சலுகையை ஏர் ஏசியா (AirAsia) நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 50 லட்சம் விமான டிக்கெட்டுகளை இந்நிறுவனம் இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. ஏர் ஏசியா நிறுவனத்தின் இந்த சிறப்பு சலுகை செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. வரும் செப்டம்பர் 25ஆம் தேதி இந்த சலுகை முடிவடைகிறது. அதற்குள் டிக்கெட் பதிவு செய்தால் இலவசமாக டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.

ஜனவரி 1ம் தேதி முதல்

இந்த சலுகையின்படி, 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலத்துக்கு விமான டிக்கெட்டுகளை இலவசமாக புக்கிங் செய்துகொள்ளலாம். இவ்வகையில் 50 லட்சம் இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படும் என ஏர் ஏசியா அறிவித்துள்ளது. இச்சலுகையின் கீழ் பல்வேறு நகரங்களுக்கு இலவசமாக டிக்கெட் வாங்கலாம். சர்வதேச நகரங்களுக்கும் இலவச டிக்கெட் வழங்குகிறது ஏர் ஏசியா. சுற்றுலா செல்பவர்களுக்கும் இதுவொரு அட்டகாசமான சலுகை.

கால அவகாசம்

தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த பல்வேறு நகரங்கள், சுற்றுலா தலங்களுக்கு ஏர் ஏசியா இலவச டிக்கெட்டுகளை வழங்குகிறது. இலவச டிக்கெட்டுகளை பெறுவதற்கு செப்டம்பர் 25ஆம் தேதிக்குள் புக்கிங் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க...

அதிவேகமாக பரவும் ஃபுளூ வைரஸ் - தற்காத்து கொள்வது எப்படி?

ஓய்வூதிதாரர்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு- 10 நாட்கள் மட்டுமே அவகாசம்!!

English Summary: Air Ticket Free - Action Announcement!
Published on: 22 September 2022, 09:35 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now