மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 November, 2019 12:19 PM IST

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வாழை சாகுபடி நடந்து வருகிறது. இதில் நவீன யுக்திகளை பயன்படுத்தி திசு வாழை, கிழங்கு வாழை வளர்ப்பு பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உற்பத்தியை பெருக்குவதற்கும், விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலும், வேளாண்மைத்துறை தற்போது கிழங்கு வாழை மற்றும் திசு வாழைக்கு மானியங்கள் வழங்கி வருகிறது.

கிழங்கு வாழைக்கு மானியமாக ஒரு ஹெக்டருக்கு ரூ.26250ம், திசு வாழைக்கு ஒரு ஹெக்டருக்கு ரூ.37,500ம் பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளது. இதற்காக விவசாயிகள் கிழங்கு வாழைக்கு உர பில் ரூ15000+ஜிஎஸ்டி மற்றும் மருந்து பில் ரூ.25000+ ஜிஎஸ்டியுடன் கூடிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதே போன்று திசு வாழைக் கன்றுகளை மானியத்தில் பெற விரும்பும் விவசாயிகள் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் அதற்கான தொகையை செலுத்தி கன்றுகளை பெற்றுக் கொண்டு பின்பு அத்தொகை அவர்களது வங்கி கணக்கில் மானியமாக வரவு வைக்கப் படும்.

அவிநாசி வேளாண்மைத்துறை சார்பாக வழங்கப்படும் மானியங்களை பெற திருப்பூர் மாவட்டம் விவசாயிகள்  விண்ணபிக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் பின்வரும் ஆவணங்களை வேளாண்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

  • கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப் பட்ட  வாழை பயிர் சாகுபடி சான்றிதழ்.
  • விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் சிட்டா, அடங்கல் (கீழ் பகுதியில் தற்போது நடவு செய்யப்பட்டு இருக்கும் வாழையின் விபரம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்), ஆதார் கார்டு ஜெராக்ஸ், ஸ்மார்ட் கார்டு ஜெராக்ஸ், பேங்க் பாஸ்புக் ஜெராக்ஸ், போட்டோ- 2 ஆகியனவாகும். மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

ர.வினோத்குமார்,
உதவி வேளாண்மை அலுவலர்,
அவிநாசி,
அலைபேசி எண்: 98422 08001

நன்றி: அக்ரி டாக்டர்

English Summary: avinashi horticulture department announces subsidy for banana tissue cultivation
Published on: 25 November 2019, 12:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now