Blogs

Wednesday, 14 December 2022 08:00 AM , by: R. Balakrishnan

PF Withdrawal

ஒவ்வொருவரும் ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானத்தைப் பெறவும், தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் ஏதாவது ஒரு திட்டத்தில் முதலீடு செய்கிறார்கள். வருங்கால வைப்பு நிதி (PF) என்பது ஒரு பிரபலமான திட்டமாகும். இதுவொரு தன்னார்வ முதலீட்டு நிதியாகும். அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் இந்த ஓய்வூதிய சேமிப்புத் திட்டத்தில், ஊழியர்கள் தங்கள் வருமானத்தில் ஒரு சிறு பகுதியை மாதந்தோறும் இந்த ஓய்வூதிய நிதியில் பங்களிப்பு செய்கின்றனர். பிற்காலத்தில் இது பெரும் உதவியாக இருக்கும். இந்தத் திட்டத்தில் மாதாந்திர பங்களிப்பு அதிகரிக்கிறது.

PF பணம் (PF Money)

ஒரு நிறுவனத்திலிருந்து வெளியேறும்போது மொத்தத் தொகையாக பணம் கிடைக்கும். வேலைபார்க்கும் போதே கூட சில நிபந்தனைகளின் கீழ் பணத்தை எடுக்கலாம். ஆனால் அதில் எதிர்காலப் பலன்கள் குறைந்துவிடும். மத்திய அரசின் மூலம் அமைக்கப்பட்ட மத்திய அறங்காவலர் வாரியம் (CBT), ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை கட்டுப்படுத்தி நிர்வகிக்கிறது.

இந்த குழுவில் முதலாளிகள், ஊழியர்கள் மற்றும் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளனர். பல நேரங்களில் ஓய்வுக்கு முன்னரே மக்கள் தங்களுடைய பிஎஃப் தொகையை திரும்பப் பெற விரும்புகின்றன. பிஎஃப் பணத்தை பல சந்தர்ப்பங்களில் திரும்பப் பெறலாம். இருப்பினும், ஆன்லைன் முறை மூலம் பிஎஃப் பணத்தை திரும்பப் பெறுவதன் மூலம் மக்கள் நிறைய நன்மைகளைப் பெறலாம். பிஎஃப் பணத்தையும் எளிதாக எடுக்க முடியும். ஆன்லைனில் பணம் எடுக்கும் செயல்முறையால், PF அலுவலகத்திற்கு நேரில் சென்று காகித வேலைகளை முடிக்க வரிசையில் காத்திருக்க வேண்டிய சிரமம் இருக்காது.

ஆன்லைன் உரிமைகோரல்

ஆன்லைன் உரிமைகோரல் காரணமாக, செயலாக்க நேரம் குறைகிறது. விண்ணப்பித்த 15-20 நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் பிஎஃப் தொகை வரவு வைக்கப்படும்.
இப்போது சரிபார்ப்புக்கு பிஎஃப் அதிகாரியிடம் நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆன்லைன் உரிமைகோரல்கள் எளிதாகவும் தானாகவும் சரிபார்க்கப்படுகின்றன. வீட்டில் இருந்தபடியே இந்த வேலையை முடிக்க முடிகிறது.

உங்களுடைய பணத்தை எடுப்பதற்கு பிஎஃப் நம்பரை ஆதாருடன் இணைத்திருக்க வேண்டும். ஆதார் நம்பரை இதுபோன்ற விஷயங்களில் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. நிதி மோசடி போன்ற விஷயங்களைத் தடுப்பதற்காக ஆதார் கார்டு நிதி தொடர்பான விஷயங்கள் அனைத்துக்கும் கட்டாமாக்கப்பட்டு வருகிறது. பிஎஃப் நம்பருடன் ஆதாரை இணைப்பதற்கும் நீங்கள் e-SEWA வெப்சைட்டில் செல்லலாம்.

PF நாமினி (PF Nominee)

பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்களது கணக்கில் ஒரு நாமினியை கட்டாயம் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த நாமினி பிஎஃப் கணக்குதாரரின் குடும்ப உறுப்பினராக இருக்கலாம். நாமினியின் பெயர், பிறந்த தேதி, பாலினம், உறவு முறை, முகவரி, ஆதார், வங்கிக் கணக்கு விவரம், புகைப்படம் போன்ற விவரங்கள் வழங்கப்பட வேண்டும். இந்த ஆவணங்களை ஆன்லைனில் சமர்ப்பித்தாலே போதுமானது.

மேலும் படிக்க

PM கிசான் 13வது தவணை எப்போது? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

பழைய பென்சன் திட்டம் வராது: மௌனம் கலைத்தது மத்திய அரசு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)