மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 November, 2019 12:34 PM IST

கடந்த 2016ஆம் ஆண்டு கால்நடைகளுக்கு உயிர் காக்கும் அவசர சிகிச்சை அளிப்பதற்கான ஆம்புலன்ஸ் திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் திருச்சி, தஞ்சாவூர், காஞ்சிபுரம், நாமக்கல், மதுரை மாவட்டங்களுக்கு தலா 2 ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டன. கடந்த 5ஆம் தேதி இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக மேலும் 22 ஆம்புலன்ஸ்கள் இந்த திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டன. மாவட்டத்திற்கு தலா ஒரு ஆம்புலன்ஸ் வீதம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் விதமாக 22 இலவச அவசர கால்நடை மருத்துவ ஊர்திகளை, 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்கியிருக்கிறது தமிழக அரசு. இதனை காணொளிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

ஆம்புலன்ஸ்கான சிறப்பம்சங்கள்

  • 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு கால்நடை வளர்ப்போர் இந்த ஆம்புலன்ஸ் சேவையைப் பெறலாம். பெயர், முழுமையான முகவரி, கால்நடைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை ஆகியவை குறித்த தெளிவான தகவல்களை தெரிவித்தால் போதும்; வீட்டிற்கே நேரடியாக வந்து இலவசமாக சிகிச்சை வழங்கப்படும்.
  • கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை பொறுத்து உரிய ஆலோசனைகள் வழங்கப்படும் அல்லது மருத்துவ உதவி தேவைப்படும் பட்சத்தில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அவசர ஊர்திகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படும்.
  • ஆடு, மாடுகள் கன்று ஈனுவதில் சிரம்ம், கருப்பை வெளித் தள்ளுதல், விஷ செடிகளை உட்கொண்டதால் ஏற்படும் பிரச்சினை, பாம்பு உள்ளிட்ட விஷ பிராணிகளால் ஏற்படும் பாதிப்புகள், விபத்துகளால் ஏற்படும் காயம் உள்ளிட்டவற்றிற்கு கால்நடைகளின் இருப்பிடத்துக்கே நேரடியாகச் சென்று இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்.
  • இந்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஒரு கால்நடை மருத்துவர், கால்நடை உதவியாளர், ஓட்டுநர் ஆகியோர் பணியில் இருப்பர்.
  • இந்த வாகனத்தில் குளிர்சாதன வசதி, மீஒலி ஆய்வு இயந்திரம் (அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர்), ஜெனரேட்டர், மாடுகளை படுத்த நிலையிலோ அல்லது நின்ற நிலையிலோ எடுத்துச் செல்ல வசதியாக ஹைட்ராலிக் லிப்ட் மற்றும் அவசர கால சிகிச்சைகளுக்குத் தேவைப்படும் அனைத்து உபகரணங்கள், மருந்துகள் உள்ளன.
  • பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மேல் சிகிச்சை தேவை என மருத்துவர் கருதினால், கால்நடையை அதே வாகனத்தில் கொண்டு சென்று அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் சேர்த்து தொடர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

சி. அலிமுதீன்
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை-07.

Dr. ச. பாவா பக்ருதீன்
கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி,
குரு அங்கத்தேவ் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், லூதியானா, பஞ்சாப்-141001

English Summary: Call 1962, any emergency for livestock: Tamil Nadu Govt Launches Animal Mobile Medical Ambulance
Published on: 11 November 2019, 12:30 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now