Blogs

Tuesday, 27 July 2021 08:28 PM , by: R. Balakrishnan

Credit ; Daily thandhi

தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவித்து அவர்களை மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் அதிக முதலீடு (Invest) செய்திடும் நோக்கில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பயனர்கள்

மீனவர்கள், மீன்வளர்ப்போர், சுய உதவி குழுக்கள், கூட்டுப்பொறுப்பு குழுக்கள், மீன் வளர்ப்போர் உற்பத்தியாளர் அமைப்புகள், தனிநபர் தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.

நிதி உதவி

இந்த திட்டத்தின் கீழ் பொதுப்பிரிவினருக்கு 25 சதவீதம் மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மகளிருக்கு 30 சதவீதம் மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியும் வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் சென்னை, காஞ்சீபுரம் (இருப்பு) நீலாங்கரை எண் 2/601, கிழக்கு கடற்கரை சாலை, மீன்வளம் மற்றும் மீனவர் நல துறை, உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 044- 24492719 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த திட்டத்திற்கான விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் இந்த மாதம் 31-ந்தேதி ஆகும். மேலும் இதற்குரிய விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் பெற்று கொள்ளலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

இந்தியாவில் எலக்ட்ரிக் சைக்கிள்: பிரிட்டிஷ் நிறுவனம் அறிமுகம்!

தனிநபர் தகவல்களை பகிர மாட்டோம் என உறுதி அளித்தது வாட்ஸ் ஆப்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)