மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 August, 2021 7:31 AM IST
Credit : Dinamalar

வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாயில், 2-வது மாடியில் இருந்து விழுந்த பூனையைக் காப்பாற்றிய 4 பேருக்கு தலா 10லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

உயிர் என வரும்போது, மனிதர்களானாலும் சரி, ஐந்தறிவு படைத்த ஜீவன்களாக இருந்தாலும் சரி, இரண்டையுமே ஒன்றாக பாவிக்கும் எண்ணம் நம்மில் ஒரு சிலருக்கு இருக்கும். அத்தகைய எண்ணம் கொண்டவர்கள் துபாயில், 2-வது மாடியில் இருந்து விழுந்த பூனையைக் காப்பாற்றியுள்ளனர்.

சுவற்றின் மீது (On the wall)

துபாயில் டெய்ரா பகுதியில் அல் மராரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் கேரளாவைச் சேர்ந்த பலர் வசிக்கிறார்கள். இவர்களில் சிலர் வீட்டில் பூனை வளர்க்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு அந்த குடியிருப்பின் 2வது மாடியின் பால்கனி சுவற்றின் மீது நடமாடிக் கொண்டிருந்த பூனை, திரும்ப வீட்டிற்குள் செல்ல முடியாமல் கீழே விழும் நிலையில் இருந்தது.

இதை அந்த குடியிருப்பில் வசித்த கேரளாவின் கோதமங்கலம் பகுதியை சேர்ந்த நசீர் முகமது பார்த்தார். உடனடியாக அங்கு இருந்த கோழிக்கோடு வடகரா பகுதியை சேர்ந்த அப்துல் ரசீத் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த மேலும் இருவரை அழைத்து, தன்னிடம் இருந்த ஒரு துணியை பூனை விழும் பகுதியில் வலை போல் விரித்து பிடித்தார். பூனை அதிர்ஷ்டவசமாக இவர்கள் விரித்த துணியில் விழுந்தது. இதனால் அந்த பூனை காயம் ஏதுமின்றி தப்பியது.

ரூ.10 லட்சம் பரிசு (Rs.10 lakh prize)

இந்த காட்சிகளை குடியிருப்பில் வசித்த சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பரப்பினர். இது துபாய் முழுவதும் வைரலானது. பூனையை உயிருடன் மீட்டவர்களுக்கு பாராட்டு குவிந்தது. இவர்களது இந்த பரிவைப் பாராட்டிய துபாய் துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷீத், பூனையை நால்வருக்கும் தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கியுள்ளார்.

செல்லப்பிராணிகள் (Pets)

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளின் மீது அளவுகடந்தப் பாசத்தை வெளிப்படுத்துவதுடன், அவற்றுக்கென பெருந்தொகையை செலவிடுவதும் உண்டு.

மேலும் படிக்க...

கொரோனாத் தடுப்பூசி போடாவிட்டால், மாதம் ரூ.15,000 கட்-அதிரடி அபராதம்

பசுமைக்கு மாறும் திருப்பதி- லட்டு பிரசாதத்திற்கு பசுமை பைகள்!

English Summary: Cat falling from 2nd floor: Rs 10 lakh reward for four rescued
Published on: 29 August 2021, 07:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now