நாமக்கலில், இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இலவச காளான் வளர்ப்பு பயிற்சி 10 நாட்கள் நடை பெற உள்ளது. வரும், 13 ஆம் பயிற்சி வகுப்புகள் தொடங்க இருப்பதால் முதலில் வரும் விண்ணப்பதாரர்களுக்கே முன்னுரிமை தரப்படும். குறைந்தபட்ச கல்வி தகுதியாக எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 – 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். பயிற்சியின்போது சான்றிதழ், பயிற்சிப் பொருட்கள், மதிய உணவு மற்றும் தேநீர் போன்றவை வழங்கப் படும். பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 04286 – 221004, 96989 96424, 88259 08170 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி நிறுவனர் தெரிவித்துள்ளார்.
Wednesday, 11 December 2019 03:26 PM
, by: Anitha Jegadeesan
எங்களுக்கு ஆதரவளியுங்கள்!
அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.
உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....