மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 December, 2021 8:32 AM IST
Childbirth on a moving bus

ஓடும் பேருந்தில் பிறந்த 2 பெண் குழந்தைகளுக்கு, அவர்கள் வாழ்நாள் முழுவதும் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்ற சலுகையை அறிவித்திருக்கிறது தெலங்கானா அரசு (Telangana Government). ஆட்டோ, ரயில், ஏன் பறக்கும் விமானத்தில் கூட குழந்தை பிறந்திருப்பதை பார்த்திருப்போம். அந்த வரிசையில் தான் தற்போது தெலங்கானாவில் ஓடும் பேருந்தில் 2 பெண் குழந்தைகள் பிறந்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பேருந்தில் பிரசவம் (Childbirth ona Bus)

இருவேறு இடங்களில் பேருந்தில் பயணம் செய்த இரு தாய்மார்களுக்கு திடீரென எதிர்பாராதவிதமாக பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, போக்குவரத்து பணியாளர்களும், பொதுமக்களும் குழந்தையை பாதுகாப்பாக பெற்றெடுக்க உதவி செய்துள்ளனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் (Ambulance) உதவியுடன் தாயும், சேயும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பிறந்தநாள் பரிசு (Birthday Gift)

ஓரு குழந்தை கடந்த மாதம் 30-ஆம் தேதி நாகர் கர்னூல் அருகே பெத்தகோதபள்ளி கிராமத்தில் பிறந்துள்ளது. மற்றொரு குழந்தை ஆசிபாபாத் அருகே சித்திபேட்டில் பிறந்துள்ளது. இவ்விரு இடங்களிலும், ஓடும் பேருந்தில் பிறந்த 2 பெண் குழந்தைகளுக்கு, பிறந்தநாள் பரிசாக (Birthday Gift) தெலங்கானா அரசு சூப்பரான அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தெலங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், இந்த 2 பெண் குழந்தைகளும் தங்களது வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற சலுகை வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்து வகையான பேருந்து சேவைகளுக்கும் இந்த பாஸ் செல்லுபடியாகும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓடும் பேருந்தில் பிறந்த 2 பெண் குழந்தைகளும் தற்போது, நலமுடன் இருப்பதாக, தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

இந்திய எல்லையில் பிறந்த குழந்தை: பார்டர் என பெயர் வைத்த பாகிஸ்தான் தம்பதி!

பெயரின் இனிஷியலையும் தமிழில் எழுத வேண்டும்: அரசு உத்தரவு!

English Summary: Childbirth on a moving bus: Stunning gift announced by the government!
Published on: 11 December 2021, 08:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now