15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது 15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 7 February, 2020 4:30 PM IST
high yielding varieties

தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளில் மிக முக்கிய இடம் வகிப்பது சிறுதானியங்கள் ஆகும். இன்று தோன்றும் பெரும்பாலான உடல் உபாதைகளுக்கு முக்கிய காரணம் நாம் நமது பாரம்பரிய உணவு வகைகளை தவிர்த்து நமக்கு பரிச்சியம் இல்லாத உணவு வகைகளை உட்கொள்ள ஆரம்பித்ததே ஆகும். இருப்பினும் இன்று மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்தது வருகிறது.

சிறுதானிய தேவை அதிகரித்து வருவதால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், திண்டுக்கல் மாவட்டத்தில் 402 ஹெக்டேரில் செயல் விளக்கத் திடல் அமைக்கப்பட்டு வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமியப் பல்கலை. வளாகத்திலுள்ள வேளாண் அறிவியல் மையத்தில் சிறுதானிய சாகுபடி குறித்து விவசாயிகளுக்கான கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. வேளாண்மைத் துறை,  தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர், வேளாண்மை இணை இயக்குநர் கலந்து கொண்டனர்.

Varieties of Millets

கருத்தரங்கின் முக்கிய அம்சமாக தமிழகத்தில் சிறுதானிய சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், உணவுகளில் சிறுதானியங்களை அதிகம் பயன்படுத்தவும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உறுதி எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டது.

சிறுதானியங்கள் சாகுபடிக்கு அரசு மானியங்களையும்,  இடுபொருள்ககளையும் வழங்கி வருகிறது. உணவுப் பாதுகாப்பு இயக்கத் திட்டத்தின் கீழ் சிறுதானிய செயல் விளக்கத் திடல் அமைக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் சாகுபடிக்கு தேவையான விதை, நுண் உரம், உயிர் உரம், உயிரியல் காரணிகள் உள்ளிட்ட இடுபொருள்களை ஹெக்டேருக்கு (ரூ.6 ஆயிரம் மதிப்பில்) வழங்கப்படுகிறது. அதேபோன்று விதை உற்பத்தி மற்றும் விதை விநியோகதிற்கு  மானியமாக கிலோவுக்கு தலா ரூ.30 வீதம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் இந்த திட்டங்களை பயன்படுத்தி உற்பத்தியினை அதிகரிக்கலாம் என கேட்டுக் கொண்டனர்.

English Summary: Conference held at Gandhigram University: Strategies to increase area and production in millets
Published on: 07 February 2020, 04:30 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now