Blogs

Friday, 01 October 2021 09:39 AM , by: R. Balakrishnan

What Tree can be grown

மரம் வளர்ப்பது தொடர்பான தகவல்களை பெற, தமிழக மரக் களஞ்சியம் திட்டம், வனத்துறையால் துவக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பசுமை பரப்பை 33 சதவீதமாக உயர்த்த, அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வனத் துறை வாயிலாக, மரம் நடும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

துவக்கம்

காலியாக உள்ள, அரசு தரிசு நிலங்களில் பயன் தரும் மரங்களை நட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தனியார் நிலங்களில் மரம் வளர்ப்பு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், மரம் வளர்க்க முன்வருவோருக்கு, எங்கு, என்ன மரம் நடுவது என்பதில், சரியான வழிகாட்டுதல் கிடைப்பதில்லை. இதனால், நிலத்தின் தன்மைக்கு ஒத்துவராத மரங்கள் நடப்படுகின்றன.

இதனால், இத்திட்டத்தின் அடிப்படையை சிதைக்கும் நிலை ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக மரம் வளர்ப்போருக்கு, எளிய முறையில் வழிகாட்ட, தமிழக மரக் களஞ்சியம் திட்டத்தை வனத்துறை (Forest Department) துவக்கி உள்ளது.

விபரம்

இது குறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாவட்ட வாரியாக, என்னென்ன மரங்களை வளர்க்கலாம் என்பதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த விபரங்களை, www.tntreepedia.com என்ற இணையதளம் வாயிலாக மக்கள் அறியலாம்.

மேலும், மரங்களின் வகை, வளர்க்கும் வழிமுறை, விதைகள், கன்றுகள் கிடைக்கும் இடங்கள், ஆலோசனை வழங்கும் அதிகாரிகள் முகவரி, தொலைபேசி எண் (Contact Number) விபரங்களையும் அறியலாம்.

மேலும் படிக்க

நெல் விற்பனைக்கு ஆன்லைன் பதிவு முறை: விவசாயிகள் எதிர்ப்பு!

350 மாவட்டங்களில் பேரிடர் நண்பர்கள் திட்டம் அறிமுகம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)