Blogs

Friday, 03 December 2021 07:04 PM , by: R. Balakrishnan

LIC's Super Policy

கொரோனா பிரச்சினை வந்த பிறகு நிறையப் பேர் சேமிப்பு மற்றும் முதலீட்டில் (Investment) அதிகம் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு மாதமும் வாங்கும் சம்பளத்தில் சிறு தொகையை எடுத்து வைத்தால் பிற்காலத்தில் அது பெரிய தொகையாக கையில் இருக்கும். இதுபோன்ற முதலீட்டுத் திட்டங்களை இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC.) செயல்படுத்தி வருகிறது. அவற்றில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் ஜீவன் உமாங் பாலிசி திட்டம்.

ஜீவன் உமாங் பாலிசி திட்டம் (Jeevan Umang Policg Scheme)

பாலிசி வாங்குவதற்கான வயது வரம்பு 90 நாட்கள் முதல் 55 வருடங்கள் ஆகும். இத்திட்டத்தில் ஆயுள் காப்பீடு கிடைப்பது மட்டுமல்லாமல் ஒரு பெரிய தொகை போனஸாக முதிர்வு காலத்தில் கிடைக்கும். முதிர்வு காலத்துக்குப் பிறகு ஒவ்வொரு வருடமும் ஒரு நிலையான தொகை உங்களது வங்கிக் கணக்கில் வந்துகொண்டே இருக்கும். பாலிசிதாரர் இறந்தபிறகு அவரது குடும்பத்தாருக்கோ அல்லது நாமினிக்கோ பாலிசி பணம் வழங்கப்படும்.

நீங்கள் இந்த பாலிசியில் மாதத்துக்கு ரூ.1,320 பிரீமியம் செலுத்தினால் 30 ஆண்டுகளில் ரூ.4.75 லட்சம் இருக்கும். அதாவது ஒரு ஆண்டுக்கு ரூ.15,840 மட்டுமே பிரீமியம் செலுத்துவீர்கள். 30 ஆண்டுகள் நிறைந்த பிறகு ஒவ்வொரு வருடமும் உங்களுக்கு ரூ.40,000 வந்துகொண்டே இருக்கும். 31 முதல் 100 ஆண்டுகள் வரை நீங்கள் இந்தப் பலனைப் பெற்றால் மொத்தம் உங்களுக்குக் கிடைக்கும் தொகை ரூ.27.60 லட்சம்.

காப்பீடு (Insurance)

வருவான வரி சட்டம் 80சி-யின் கீழ் இத்திட்டம் வரி விலக்கு பெறுவது கூடுதல் அம்சமாகும். இது சந்தை அபாங்களுக்கு உட்படாது என்பது குறிப்பிடத்தக்கது. எல்.ஐ.சி. ஜீவன் உமாங் பாலிசி திட்டத்தில் பயன்பெறுவதற்கு குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் காப்பீடு (Insurance) செய்ய வேண்டும்.

மேலும் படிக்க

Made in Covai: நம்ம பட்ஜெட்டிற்கு கட்டுபடியாகும் விலையில் மின்சாரக் ஸ்கூட்டர்!

சேமிப்பை எளிதாக உயர்த்த 30 நாள் திட்டத்தை கடைபிடியுங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)