மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 July, 2022 8:08 AM IST

உடல் நலக்குறைவு என்பது யாருக்குவேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். அப்படி வந்த நோயைக் கண்டு கலங்காமல், தைரியமாக எதிர்த்துப்போராட வேண்டியதுதான் நமது கடமை.

அப்படி, மூட்டுவலியால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, மரத்தடி மருத்துவரிடம் வைத்தியம் பார்க்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

தமது பெற்றோரின் மூட்டு வலிக்கும் இந்த மருத்துவரே சிகிச்சை அளிக்கிறார் என்பதால், பரம்பரை மருத்துவரையே நாடியிருக்கிறார் தோனி.
தனது சொந்த ஊரான ராஞ்சியில் மரத்தடியில் உள்ள ஒரு வைத்தியரிடம் நான்கு நாட்களுக்கு ஒரு முறை சென்று மருந்து வாங்கி செல்கிறார்.

மூட்டு வலி

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனி, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் பொழுதை கழித்து வருகிறார். ராஞ்சியில் சில இளம் கிரிக்கெட் வீரர்களை சந்திக்க ஜேஎஸ்சிஏ மைதானத்துக்கும் அவ்வப்போது செல்கிறார்.

ஓய்வு நேரத்தில் தனது மூட்டு வலியை சரிசெய்ய ராஞ்சி கிராமத்தில் உள்ள ஒரு வைத்தியரிடம் மருந்து எடுத்து வருகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.தோனி தனது வீட்டிலிருந்து நான்கு நாட்களுக்கு ஒரு முறை சுமார் 70 கிலோமீட்டர் பயணம் செய்து வந்து மருந்தை பெற்று செல்கிறார்.

30 வருட சிகிச்சை

தோனிக்கு முன், இதே வைத்தியர் அவரது பெற்றோருக்கும் சிகிச்சை அளித்துள்ளார். கடந்த 30 வருடங்களாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார் இந்த மருத்துவர். மரத்தடியில் தார்பாய் கூடாரத்தில் அமர்ந்து தோனி கடந்த ஒரு மாதமாக முழங்கால் வலிக்கு மருந்து வாங்கி வருகிறார். அவர் அமர்ந்திருக்கும் இடம் லபுங் காவல் நிலையப் பகுதியில் உள்ள கட்டிங்கேலாவில் உள்ளது.

அந்த வைத்தியரின் பெயர் வைத்திய பந்தன் சிங் கர்வார். உலகப் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுக்கு நாம் மருந்து கொடுக்கிறோம் என்பது,  பந்தன் சிங்கிற்கு தெரியாது. ஒரு நாள் காரைச் சுற்றி பல இளம் குழந்தைகள் தோனியுடன் செல்ஃபி எடுப்பதைப் பார்க்கும் வரை தோனியைப் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை.

இது குறித்து வைத்தியர் கூறியதாவது, எந்த ஆடம்பரமும் இல்லாமல் சாதாரண நோயாளி போல் தோனி வருகிறார். நான்கு நாட்களுக்கு ஒருமுறை தோனி வருவார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு சென்று விட்டது. தற்போது அவர் காரில் அமர்ந்து மருந்து சாப்பிட்டு செல்கிறார். தோனியின் முழங்கால் வலி விரைவில் குணமாகும் என நம்புகிறோன் என்று கூறினார். தோனி ஐபிஎல் 2023-ல் பங்கேற்க உள்ளார்.

மேலும் படிக்க...

பொது இடத்தில் 'ஊதினால்' ரூ.2,000 அபராதம் - ஆண்கள் கவனத்திற்கு!

10 நிமிடத்தில் மது டெலிவரி- குடிமகன்களுக்கு குஷி!

English Summary: Dhoni is getting treatment from the treeside doctor!
Published on: 02 July 2022, 08:08 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now