Blogs

Monday, 25 July 2022 08:56 PM , by: R. Balakrishnan

PF Account

கடந்த சில மாதங்களில் ஏராளமான ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைத்திருக்கும். இந்த ஆண்டுக்கான சம்பள உயர்வு, பிற சலுகைகள் பற்றிய தகவல்களை பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடம் தெரிவித்துவிட்டன. சம்பள உயர்வு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் இருந்தால் அதனால் PF பணத்துக்கு வரியும் விதிக்கப்படும். அதாவது, PF பங்களிப்பு தொகை குறிப்பிட்ட வரம்புக்கு மேல் உயர்ந்தால் வட்டி தொகைக்கு வரி விதிக்கப்படும். இதற்கான விதிமுறைகள் கடந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது.

PF பங்களிப்பு தொகை (PF Contribution amount)

ஒரு ஊழியர்களின் சொந்த PF பங்களிப்பு தொகை ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் PF வட்டித் தொகைக்கு வரி விதிக்கப்படும். இந்த நடைமுறை 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆகவே, நடப்பு நிதியாண்டுக்கு (2022-23) உங்கள் சொந்த PF பங்களிப்பு தொகை எவ்வளவு என்பதை மொத்தமாக கணக்கிட வேண்டும்.

உங்கள் நிறுவனம் செலுத்தும் பங்களிப்பு தொகை தேவையில்லை. உங்கள் சொந்த PF பங்களிப்பு மட்டுமே கணக்கிட வேண்டும்.
உங்கள் சம்பள ஸ்லிப் (Salary slip) அல்லது PF அறிக்கையில் சொந்த பங்களிப்பு தொகை பற்றி தெரிந்துகொள்ளலாம். ஆண்டுக்கான சொந்த PF பங்களிப்பு தொகை மொத்தமாக 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் வட்டி தொகைக்கு வருமான வரி விதிக்கப்படும்.

இதனால், PF வாடிக்கையாளர்கள் தங்களது பங்களிப்பு தொகையை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். மேலும், PF மாதாமாதம் வரவு வைக்கப்படுகிறதா என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க

சீனியர் சிட்டிசன்களுக்கு நிறைய வருமானம் எங்கே கிடைக்கும்? முழு லிஸ்ட் இதோ!

PF வாடிக்கையாளர்களுக்கு இப்படி ஒரு வசதி இருக்கா? யாருக்கும் தெரியாத திட்டம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)