மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 6 January, 2021 9:48 PM IST
Credit : The Finance

எஸ்பிஐ வங்கி ஆன்லைனிலேயே டிஜிட்டல் சேமிப்புக் கணக்கை தொடங்குவதற்கான வசதியை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் ஆதார் எண் (Aadhar), பான் கார்டு எண் (PAN card number) மட்டும் வைத்து உடனடியாக வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் சேமிப்புக் கணக்கு துவங்கலாம்.

டிஜிட்டல் சேமிப்புக் கணக்குகள்

எஸ்பிஐ வங்கியின் யோனோ ஆப் (Yono App) மூலம் உடனடியாக டிஜிட்டல் சேமிப்புக் கணக்கு திறப்பதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ தலைவர் ராஜ்னிஷ் குமார், “வங்கிக் கிளைக்கு செல்லாமலேயே வங்கி சேவைகளை முழுமையாக பயன்படுத்துவதற்கு டிஜிட்டல் சேமிப்புக் கணக்குகள் (Digital savings account) உதவுகின்றன. இதில் வங்கி சேவைகளுக்கான எல்லா அம்சங்களும் இருக்கின்றன. இதன்படி டிஜிட்டல் சேமிப்புக் கணக்கு தொடங்கிய பின்னர் வாடிக்கையாளருக்கு ரூபே (Rupa) ஏடிஎம்/டெபிட் கார்டு அனுப்பிவைக்கப்படும்.

டிஜிட்டல் சேமிப்புக் கணக்கை திறப்பது எப்படி?

உங்கள் மொபைலில் யோனோ (Yono) செயலியை டவுன்லோட் செய்து பான் கார்டு எண், ஆதார் கார்டு எண் உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும். உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபி (OTP) பாஸ்வோர்டை நிரப்பி மற்ற கூடுதல் விவரங்களையும் நிரப்ப வேண்டும்.

பெஹ்லா கதம், பெஹ்லி உதான்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ‘பெஹ்லா கதம்’ மற்றும் ‘பெஹ்லி உதான்’ என்ற சிறார்களுக்கு இணைய வங்கி மற்றும் மொபைல் வங்கி வசதியுடன் சேமிப்பு வங்கி கணக்குகளை வழங்கி வருகிறது. பணத்தை சேமிப்பதன் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதோடு, “பணத்தை வாங்கும் சக்தியையும்” அறிந்து கொள்ள இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவிக்கிறது. இரண்டு சேமிப்பு வங்கி கணக்குகளை சிறார்களுக்கு வழங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எஸ்பிஐ தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

இந்த வங்கி கணக்குகளுடன் தொடர்ச்சியான வைப்புத்தொகைக்கு ஒரு நிலையான வழிமுறையை அமைப்பதற்கான விருப்பம் இலவசமாகக் கிடைக்கிறது. சிறார்களுக்கான எஸ்பிஐ சேமிப்பு வங்கி கணக்கின் அம்சங்கள். வங்கி கணக்கில் மாத சராசரி இருப்புத்தொகை (MAB) பணம் தேவையில்லை அதிகபட்ச இருப்புத்தொகை ரூ.10 லட்சம் ஆகும். செக் புத்தக வசதி இரண்டு வகையான கணக்குகளுடன் கிடைக்கிறது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

பிஸினஸ் ஐடியா 2021 : அமுல் உடன் தொழில் தொடங்கலாம் வாங்க! குறைவான முதலீட்டில் நிறைவான வருமானம்!!

வேலை இழப்பை சமாளிக்க வந்துள்ளது ஒரு காப்பீடு!

English Summary: Digital account online! SBI Bank's New Plan!
Published on: 06 January 2021, 09:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now