சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 26 May, 2020 8:24 AM IST

மானாவாரி விவசாயத்தினை மேம்படுத்தும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2000 எக்டேர் பரப்பில் பயிறு வகைப் பயிர்கள் பயிரிடும் படி விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகின்றனர். மாவட்ட வேளாண்மை இயக்குநர் விடுத்துள்ள அறிக்கையில், மானாவாரி வளர்ச்சி இயக்கம் எனும் புதிய திட்டம் மூலம் நிலைக்கத்தக்க விவசாயத்தை மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

வேளாண்மைத் துறை மூலம் 2020-21ம் ஆண்டில் மானாவாரி விவசாயத்தினை ஊக்குவிக்கவும், சாகுபடி பரப்பளவை அதிகப்படுத்தும் நோக்கில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத், திருப்பெரும்புதூர், சிறுகாவோரிப்பாக்கம் மற்றும் உத்திரமேரூர் ஆகிய 4 வட்டாரங்களிலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள   பவிஞ்சூர், அச்சரப்பாக்கம், திருக்கழுக்குன்றம், சித்தாமூர் மற்றும் மதுராந்தகம் ஆகிய 5 வட்டாரங்களிலும் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மானாவாரி நிலங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அவற்றை 100 எக்டேர் பரப்பளவு கொண்ட தொகுப்புகளாக பிரித்து அதிலுள்ள விவசாயிகளுக்கு கோடை உழவு மேற்கொள்வதற்கு எக்டேருக்கு ரூ.1.250 மானியமாக வழங்கப்பட உள்ளது. மேலும் அத்துடன் 50 சதவீத மானிய விலையில் பயிரிட தேவையான விதைகள், ஊடுபயிருக்கான விதைகள்,

விதை நேர்த்தி மருந்துகள் மற்றும் உயிர் உரங்கள் வழங்கப்பட உள்ளது. இதில் சிறப்பாக செயலாற்றும் விவசாய குழுக்களுக்கு மானியத்தில் வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதற்கான இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தில் இணைய விரும்பும் மானாவாரி விவசாயிகள் அருகில் உள்ள தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி தேவையான விவரங்களை பெறலாம்.

English Summary: District Agriculture Department Extend Support And subsidy for Manavari Land Farmers in Tamil Nadu
Published on: 26 May 2020, 08:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now