மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 April, 2020 11:12 AM IST

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் விவசாயகளின் வசதிக்காக மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றும் பொருட்டு வேளாண்துறை சார்பில், நடமாடும்  விற்பனை மையங்கள் செயல் பட்டு வருகின்றன.

நடமாடும் விற்பனை நிலையம்

தேனி மாவட்டத்தில் நடமாடும் உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை நிலைய சேவையை மாவட்ட நிர்வாகம் துவங்கி உள்ளது. அனைத்து இடங்களிலும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனைக் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மட்டுமே செயல்பட அரசு அனுமதித்துள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி, வேளாண் பணி தடையின்றி நடைபெற அவர்களுக்கு தேவையான உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் நடமாடும் விற்பனை நிலையம் மூலம் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று விற்பனை செய்யப்படுகிறது.

விவசாயிகள் நடமாடும் உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து விற்பனை நிலைய சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.  மேலும் தற்போது போதிய அளவு உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் உள்ளன எனவும், விவசாயிகள் இந்த விற்பனை நிலையங்களில் இடுபொருளை வாங்கும் போது  தங்களின் ஆதார் எண்ணை சமர்ப்பித்து, தங்களுக்கு தேவையான உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை வாங்கி பயன்படுத்தலாம். அவர்கள் வாங்கும் உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு விற்பனை முனைய கருவி மூலம் ரசீது வழங்கப்படுகிறது.   

English Summary: District Agriculture Department Is Delivering Pest And Fertilizers Near By Areas Of The Farmers
Published on: 17 April 2020, 08:35 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now