மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 September, 2022 12:10 PM IST

பெண்குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோருக்கு குழந்தைக்கு 15,000 ரூபாய் வீதம் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. இதனைப் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெற்றோர் தவறாது பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

கன்யா சுமங்கலா யோஜனா.

பெண் குழந்தைகளுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குழந்தை வளர்ப்பு முதல் கல்வி, திருமணம் வரை பல திட்டங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் கன்யா சுமங்கலா யோஜனா.

ரூ.15 ஆயிரம்

இந்த கன்யா சுமங்கலா யோஜனா திட்டத்தின் கீழ், அரசு தரப்பிலிருந்து மகள்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ஒரு குடும்பத்தின் இரண்டு மகள்கள் பயன்பெறலாம். குழந்தை வளர்ப்பு மற்றும் கல்வியை கருத்தில் கொண்டு, அரசு இந்த பணத்தை ஆறு தவணைகளில் வழங்குகிறது. உத்தரப் பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசுதான் இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மகள்களுக்கான கன்யா சுமங்கலா திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், மாநிலத்தில் இதுவரை சுமார் 14 லட்சம் மகள்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்றுள்ளதாகவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

நிபந்தனை

ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு இத்திட்டத்தின் பலன் கிடைக்கும்.

பெறுவது எப்படி?

இந்தத் திட்டத்தில், முதலில் நீங்கள் தபால் அலுவலகத்தில் மகளுக்கான கணக்கைத் திறக்க வேண்டும். குழந்தை பிறந்தவுடன் முதல் தவணை ரூ.2,000 கிடைக்கும். தடுப்பூசிக்குப் பிறகு இரண்டாவது தவணையாக 1,000 கிடைக்கும். மகள் முதல் வகுப்பில் சேரும்போது மூன்றாவது தவணையாக 2000 ரூபாய் கிடைக்கும்.

அதன் பிறகு, மகள் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டால், நான்காவது தவணையாக 2,000 ரூபாய் வழங்கப்படும். அதே சமயம், 9ஆம் வகுப்பில் சேரும்போது, ஐந்தாவது தவணைக்கு 3,000 ரூபாய் கிடைக்கும். மீதமுள்ள 5000 ரூபாய் 10-12 ஆம் வகுப்பு தேர்ச்சிக்குப் பிறகு பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பில் சேரும்போது வழங்கப்படும்.

மேலும் படிக்க...

அதிவேகமாக பரவும் ஃபுளூ வைரஸ் - தற்காத்து கொள்வது எப்படி?

ஓய்வூதிதாரர்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு- 10 நாட்கள் மட்டுமே அவகாசம்!!

English Summary: Do you have a daughter? Then grab Rs. 15,000!
Published on: 24 September 2022, 11:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now