மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 April, 2020 2:48 PM IST

ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.  அதுமட்டுமல்லாது உள்ளூரில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான சந்தை வாய்ப்பு அதிகரித்து வருவதால் அந்தந்த வட்டார விவசாயிகள் முனைப்புடன் காய்கறிகள், பழங்கள், கீரைகள் என குறுகியாக கால சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களின் தேவையையும், தற்போதுள்ள சந்தை வாய்ப்பையும் முழுமையாக பயன்படுத்தும் வகையில் பொள்ளாச்சி விவசாயிகள், காய்கறி பயிர் சாகுபடிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். அதற்காக தென்னையில் ஊடுபயிராக குறுகியகால காய்கறியை பயிரிட கின்றனர். பொது மக்களும் அருகில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் கீரைகளுக்கு அதிக முக்கியத்துவம் தர துவங்கி உள்ளனர். அதுமட்டுமல்லாது கூடுதல் விலை கொடுத்து வாங்கவும் தயாராக உள்ளனர் என்பதால் விவசாயிகள் தடை உத்தரவு காலத்திலும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

ஊரடங்கு முடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினாலும் காய்கறிக்கான தேவை இவ்வாறே இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு தென்னந்தோப்புகளில் ஊடுபயிராக மிளகாய், வெண்டை, அரசாணி, சேனைக்கிழங்கு, பூசணி என காய்கறிகளை சாகுபடி செய்கின்றனர். மேலும் பொள்ளாச்சி விவசாயிகள் தற்போது இருக்கும் வளங்கள் மற்றும் ஆள் வசதியை பயன்படுத்தி, அதிக அளவில் காய்கறி பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது உள்ளூரில் உற்பத்தியாகும் காய்கள் மட்டுமே மக்களின் தேவையை பூர்த்தி செய்வதால் இங்குள்ள காய்கறிகளுக்கான தேவை எப்போதும் போல அதிகரிக்கத்தான் செய்யும். ஊரடங்கு மற்றும்  கோடை வறட்சி உள்ளிட்ட காரணங்களினால், பெரும்பாலான இடங்களில் காய்கறி உற்பத்தி சரிந்துள்ளதாக தெரிகிறது. எனவே வரும் காலங்களில் உள்ளூரில் உற்பத்தியாகும் காய்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.

English Summary: Do you Know, How the Framers are working for Future Market under this lockdown period?
Published on: 15 April 2020, 02:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now