மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 March, 2020 4:15 PM IST

நஞ்சில்லாத உணவுப் பொருளை உற்பத்தி செய்வைதன் மூலம் பாதுகாப்பான உணவை பெறலாம். எனவே விவசாயிகள் தங்களது நிலங்களில், அரசால் பரிந்துரைக்கப்பட்ட ரசாயன பூச்சிக்கொல்லிகளை மட்டும் பயன்படுத்தினால் சாகுபடி செலவு குறையும் என ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மைய அதிகாரிகள்  ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

மத்திய பயிர் பாதுகாப்பு மையம் மூலம் விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இதில் காலத்துடன் விதைப்பு செய்தல், விதைகள் பயன்பாட்டு வீதம், பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகள் போன்ற பயிர் செலவின குறைப்பு நடவடிக்கைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது மேம்படுத்தப்பட்ட விதைகள், பயிர் பாதுகாப்பு மருந்துகள், ஒருங்கிணைந்த பூச்சிக்கொல்லி மேலாண்மைக்கான உயிரி பூச்சிக் கொல்லிகள், மண் மேம்பாட்டு பொருட்கள் போன்றவற்றை மாநில அரசு மூலம் விநியோகத்து வருகிறது. விவசாயிகள் அரசு இலவசமாக வழங்கும் டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி, இயற்கை இரை விழுங்கிகளான நெரவிடு நாவாய் பூச்சி, பச்சைக் கண்ணாடி இறக்கைப் பூச்சி, உயிரிப் பூஞ்சானக் கொல்லிகளான மெட்டாரைசியம், பவேரியா, ஐசேரியா, டிரைக்கோடா்மா போன்றவை பயன்படுத்துமாறு ஆலோசனை கூறினர்.

விவசாயிகள் கூடுமானவரை உயிரிப் பூச்சிக்கொல்லிகள், இயற்கை பூச்சி விரட்டிகளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் எனவும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில், ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர். பரிந்துரைக்கப்பட்ட ரசாயன பூச்சிக்கொல்லிகளை, பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, விவசாயிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்கள்.

English Summary: Do you know how to nurture your crops and reap the benefits of healthy produce?
Published on: 18 March 2020, 04:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now