மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 February, 2020 5:41 PM IST

குறைவில்லா வருவாய் தரும் கீரை சாகுபடியை மேற்கொள்ளவதற்கு திருப்பூர் மாவட்ட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். உடுமலை அருகே, கிளுவங்காட்டூர், குறிச்சிக்கோட்டை சுற்றுப்பகுதிகளில் குறைந்த பரப்பளவில், கிணற்றுப்பாசனத்தின் மூலம் கீரை சாகுபடி அமோகமாக நடைபெற்று வருகிறது.   அப்பகுதியில் இருந்து தினமும், உடுமலை உழவர் சந்தைக்கு பலவகையான கீரைக்கட்டுகள் கொண்டு வரப்பட்டு நாளொன்றுக்கு குறைந்தபட்சம், 100 கட்டுகள் வரை விற்பனை செய்யப்படுகிறது.

விவசாயிகள் கூறுகையில், விதைக்கும் முன் பத்து சென்ட் அளவுக்கு பாத்தி போன்று பிரித்து, ஒவ்வொரு கட்டமாக விதைப்பு செய்கிறோம். விதைப்பின் போது ஒரு தண்ணீரும், அறுவடைக்கு முன் ஒரு தண்ணீர் என, இரண்டு முறை பாசனம் செய்தால் போதுமானது.பொதுவாக சிறுக்கீரை, அரைக்கீரை, வெந்தயக்கீரைகள் விதைத்த, 25 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். மணத்தக்காளி கீரைக்கு மட்டும் நாற்று உற்பத்தி செய்ய வேண்டி உள்ளதால், விளைநிலத்தில் நாற்றுகளை நடவு செய்து பின் அதிலிருந்து ஒரு மாதம் இடைவெளியில் அறுவடை செய்கிறோம். மீண்டும் 15 முதல், 20 நாட்கள் இடைவெளியில் கீரை தழைத்து அடுத்த அறுவடைக்கு தயாராகி விடும். ஒருமுறை நடவு செய்தால் தொடர்ந்து 20 முறை அறுவடை செய்யமுடியும் என்கிறார்கள். பாலக்கீரையும் தொடர்ந்து, 6 மாதங்கள் வரை பலன் தரும் என்கிறார்கள். மற்ற காய்கறி சாகுபடியுடன் ஒப்பிடுகையில் கீரை சாகுபடி லாபம் தருவதாக உள்ளது என்கிறார்கள். 

English Summary: do you know what is the easiest and most profitable crop to grow?
Published on: 11 February 2020, 05:41 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now