மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 December, 2019 2:13 PM IST

கம்பம் பள்ளதாக்கு விவசாயிகள் செண்டுமல்லியின் அமோக விளைச்சலால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனிமாவட்டம், கம்பம் சுற்றியுள்ள கிராமங்களில் வாழை, திராட்சை, தென்னை மற்றும் பீட்ரூட்  முள்ளங்கி, நூக்கல் போன்ற காய்கறிகளை பயிர்செய்து  வருகின்றனர். காய்கறிகள் மற்றும் பழங்கள் வளர்வதற்கான ஏற்ற சூழ்நிலை நிலவுவதால், முல்லைப் பெரியாறு நீர் மற்றும் கிணற்று நீர்பாசனம் மூலம் போதிய நீர் கிடைப்பதாலும் அங்குள்ள பெரும்பாலான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

வறட்சியை தாங்கி குறைந்த நீர் பாசனத்தில் செழித்து வளர கூடிய பூக்களில் செண்டு மல்லி முதன்மையானது ஆகும். எனவே பெரும்பாலான விவசாயிகள் செண்டுமல்லியை தனிப்பயிராகவும்ஊடு பயிராகவும் சாகுபடி செய்து லாபம் ஈட்டி வருகிறார்கள். தற்போது கூடலூர், ஆங்கூர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செண்டு மல்லி சாகுபடி செய்து வருகிறார்கள்.

வாழைக்கன்றுகளின் இடையில் செண்டு மல்லி பூ ஊடுபயிராக பயிரிடுவதினால் விவசாயிகளுக்கு பல்வேறு பயன்கள் கிடைக்கிறது. முதலில் கிழங்குகளில் ஓட்டையிடும் நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்த முடியும். அதுமட்டுமல்லாது பாசனத்தில் உபரி நீரை பயனுள்ளதாக மாற்ற, ஊடுபயிர்களை சாகுபடி செய்யலாம். உபரி வருமானத்தில் ஆண்டுபயிரான வாழைக்கு உரமிடுதல், களை வெட்டுதல் உள்ளிட்ட செலவுகளை ஈடுகட்டமுடியும்.  நடவு செய்யப்பட்ட அறுபது நாட்களில் செண்டு மல்லி பூ பிடித்து விடுகிறது. பின்னர் நூறு நாட்கள் வரை தொடர்ந்து பலன் கொடுக்கிறது. அக்டோபர் மாதம் நடவு செய்யப்பட்ட செண்டு மல்லி பூ தற்போது அறுவடை செய்து கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

English Summary: Do you know which is the best crop for intercropping with banana
Published on: 30 December 2019, 02:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now