Blogs

Wednesday, 18 December 2019 04:19 PM , by: Anitha Jegadeesan

வேளாண்மையில் ஊடுபயிர் சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டலாம். எனவே பெரும்பாலான விவசாயிகள் நீண்ட கால பயிர்களுக்கு இடையில் குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பெரியகுளம் பகுதிகளில் அதிக நிலபரப்பில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வாழைத்தார் அறுவடைக்கு வர 10 மாதங்கள் ஆகும் என்பதால் விவசாயிகள் உடுபயிராக அதனுள் சின்னவெங்காயம், தட்டை பயறு, மொச்சை, வெண்டை என குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

குறுகியகாலப் பயிர்களை சாகுபடி செய்வதன் மூலமாக வாழை சாகுபடி செலவை ஈடு கட்ட முடிகிறது என்கிறார்கள். பொதுவாக வாழை நடவு செய்த ஐந்து மாதங்களுக்குப் பிறகுதான் பூமியில் சூரிய ஒளி விழுவது தடைபடும் என்பதால் அதற்கேற்ற பயிர்களை சாகுபடி செய்கின்றனர். இதன் முலம் இடுபொருள் இல்லாமலே இலாபம் ஈட்டி வருகிறார்கள். 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)