மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 November, 2021 8:36 AM IST
Credit: One India Tamil

தீபாவளி தினத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் திரைக்கு வந்ததையொட்டி, சிறப்பு சலுகையாக திருச்சியை சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர் தனது ஓட்டலில் ஒரு ரூபாய்க்கு ஒரு தோசை விற்பனை செய்தார்.

அண்ணாத்த ரிலீஸ்

தகுந்த நேரத்தில் சரியான முடிவை எடுத்தால், அது நமக்கு நல்லப் பலன்களைத் தரும் என்பார்கள். இதைப்போல, ரஜினியின் புதியப் படமான அண்ணாத்த ரிலீஸ் ஆனதையொட்டி, திருச்சியில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

ரஜினி ரசிகர்களை மகிழ்விப்பதுடன், தங்கள் வியாபாரத்தையும் சூடு பிடிக்கச் செய்யத் திட்டமிட்ட ரஜினி ரசிகரான இந்த ஹோட்டல் உரிமையாளர், அண்ணாத்த படம் ரிலீஸை முன்னிட்டு ஓர் விளம்பரம் செய்திருந்தார்.

ஒரு ரூபாய்க்கு தோசை (Dosa for one rupee)

என்னவென்றால், தீபாவளியான நவம்பர் 4ம் தேதி அன்று, ஒரு ரூபாய்க்கு தோசை விற்பனை செய்வது என்பதுதான் அது. இதன் அறிவிப்பைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஒரு ரூபாய் தோசை சாப்பிடுவதற்காகக் குவிந்தனர்.
சிலர் தோசை சாப்பிட்டுவிட்டு அண்ணாத் படம் பார்க்கச் சென்றனர். வேறு சிலர் படம் பார்த்துவிட்டு வந்து, தோசை சாப்பிட்டனர்.

தீபாவளிஅன்று ஹோட்டல் விடுமுறை என்பதால் இன்று ஒரு நாள் மட்டும் அண்ணாத்த ஸ்பெஷலாக ஒரு ரூபாய்க்கு ஒரு தோசை விற்பனை செய்து வருவதாக அந்த ரஜினி ரசிகர் கூறினார்.

மேலும் படிக்க...

பட்டாசுக்கு பலியான தந்தை- மகன்- இருசக்கர வாகனத்தில் விபத்து!

வெளிநாட்டில் வெங்காயப் பண்ணையில் வேலை - மாதம் ரூ.1 லட்சம் ரூபாய் சம்பளம்!

English Summary: Dosa for a rupee - people gathered to eat!
Published on: 05 November 2021, 08:36 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now