மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 February, 2020 1:56 PM IST

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மலை தோட்டங்களில் வறட்சியின் தாக்கம் அதிகரித்து வருவதை அடுத்து தோட்டங்களில் ஈரப்பதம் குறைந்து வருகிறது. இதனால் பயிர்களை வறட்சியில் இருந்து பாதுகாக்க ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயமே பிரதானமாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் மலை காய்கறிகளையும் இணைந்து சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக நெடுகுளா, கூக்கல்தொரை, சுள்ளிகூடு மற்றும் கட்டபெட்டு ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் அதிக பரப்பளவில் கேரட் சாகுபடி செய்து வருகின்றனர். சந்தையில் ரூ.40 முதல் ரூ.55 வரை விற்பனையாவதால் ஓரளவு லாபம் கிடைத்து வருகிறது.

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்குவதை அடுத்து, விளை நிலங்கள் விரைவில் வறண்டு விடுகிறது. இதனால், விவசாயிகள் கிணறுகள் அமைத்து,  அதிலிருந்து  ஸ்பிரிங்ளர் மூலம், தண்ணீர் பாய்ச்சி தோட்டத்தின் தேவைவை நிறைவேற்றி வருகின்றனர்.

இது பற்றி விவசாயிகள் கூறுகையில், இனி வரும் நாட்களில், வறட்சியின் தாக்கம் மேலும் கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நிராதாரங்களான ஓடைகளில் கிணறுகள் அமைத்து, ஸ்பிரிங்ளர் மூலம், தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வறட்சியினை சமாளித்து வருகிறோம் என்றனர்.

English Summary: Efficient Water Management of hills Crop: Sprinkler provides best Irrigation Solution for farmers
Published on: 28 February 2020, 01:56 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now