மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 July, 2021 8:06 PM IST
Credit : Dinamalar

பிரிட்டிஷ் எலக்ட்ரிக் பைக் நிறுவனமான, ‘கோ ஜீரோ மொபிலிட்டி’ இந்தியாவில், ‘ஸ்கெலிக் லைட் இ – பைக்’ எனும் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை, 19 ஆயிரத்து 999 ரூபாய். இந்த சைக்கிள் மின்சாரத்தில் செயல்படுவதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மின்சார சைக்கிள்

நகர போக்குவரத்துக்கு மிகவும் ஏற்ற, இந்த மின்சார சைக்கிள் (Electric Cycle) ஒரு முறை ‘சார்ஜ்’ ஏற்றினால், 25 கிலோமீட்டர் துாரம் வரை செல்லலாம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக, மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம். இதில், கழற்றிக்கொள்ளும் வகையிலான, 210 வாட் ஹவர் லித்தியம் பேட்டரியும் (Lithium Battery), 250 வாட் ரியர் ஹப் டிரைவ் மோட்டாரும் (Drive Motor) உள்ளன. கூடவே, எல்.இ.டி., டிஸ்பிளே வசதியும் உள்ளது.

முன்பதிவு

ஒரு முறை இந்த பேட்டரியை சார்ஜ் ஏற்ற, இரண்டரை மணி நேரம் பிடிக்கும். ஸ்கெலிக் லைட் தவிர, மேலும் இரண்டு மாடல்களும் உள்ளன. ஸ்கெலிக் லைட் வாகனத்தை 2,999 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அங்கிட் குமார் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே எலக்ட்ரிக் பைக் அறிமுகமாயுள்ள நிலையில், தற்போது எலக்ட்ரிக் சைக்கிளின் வருகை அனைவரிடையே எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க சரியான நேரம்! ரூ. 20,000 தள்ளுபடி!

இந்தியாவில் எக்ட்ரிக் பஸ்ஸை இயக்க சென்னை உள்பட 9 நகரங்கள் தேர்வு!

English Summary: Electric bicycle in India: British company introduced!
Published on: 23 July 2021, 08:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now