நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 May, 2022 10:43 AM IST

மதிய வேளைகளில், நன்றாக சாப்பிட்டுவிட்டுச் சென்று வேலை செய்யும்போது, நம்மை அறியாமல் கண்கள் சொருகும். அப்படித் தூங்குவதை எந்த நிறுவனமும் அனுமதிப்பதில்லை. அவ்வாறுத் தூங்கி வழியும் ஊழியர்கள் மீது, நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது சகஜம்.

ஆனால், அப்படித் தூங்கும் நிலை ஏற்படும் ஊழியர்களின் நலன்கருதி,
பெங்களூருவை சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஊழியர்கள் வேலை நேரத்தில் தூங்க அனுமதி அளித்துள்ளது.

தூங்கக்கூட நேரமில்லாத அளவுக்கு வேலை வாங்கும் நிறுவனங்கள் ஒரு பக்கம் இருக்க, வேலை செய்யும் நேரத்தில் ஊழியர்கள் சிறிது ஓய்வு எடுத்து புத்துணர்ச்சியுடன் மீண்டும் வேலை செய்ய புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம்.

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது வேக்ஃபிட் (wakefit) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம். இந்நிறுவனம் படுக்கை உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. 

30 நிமிடம் அனுமதி

இதன்படி, ஊழியர்கள் வேலை நேரத்துக்கு நடுவே 30 நிமிடங்களுக்கு ஒரு குட்டி தூக்கம் போட அனுமதி அளிக்கப்படுகிறது. ஊழியர்கள் உறங்குவதற்கு உரிமை உண்டு எனவும் வேக்ஃபிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வேக்ஃபிட் நிறுவனத்தின் துணை நிறுவனர் சைத்தன்யா ராமலிங்ககவுடா ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள இமெயிலில், ஊழியர்கள் அனைவரும் பிற்பகல் 2 மணி முதல் 2.30 மணி வரை உறங்கலாம் என தெரிவித்துள்ளார். அதுவும் உடனடியாக இந்த 30 நிமிட தூங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஊழியர்கள் 26 நிமிடம் தூங்கினால் அவர்களது செயல்திறன் 33% அதிகரிக்கும் என நாசா நடத்திய ஆய்விலும், ஊழியர்கள் உறங்குவதால் அவர்கள் சோர்வடைவது தடுக்கப்படும் என ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்விலும் தெரியவந்துள்ளதாக சைத்தன்யா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

ஊறவைத்த முந்திரியின் எக்கச்சக்க நன்மைகள்!

வாத நோய்க்கு வித்திடும் உருளைக்கிழங்கு- மக்களே உஷார்!

English Summary: Employees can sleep while working- Licensed company!
Published on: 09 May 2022, 10:43 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now