Blogs

Monday, 01 November 2021 10:43 AM , by: Elavarse Sivakumar

Credit : DTNext

தெற்கு ரயில்வேயில் (Southern Railway) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு (Employment)

தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான (Sports Quota) சிறப்பு பிரிவில் காலியாக உள்ள 21 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு விளையாட்டுத்துறையில் சிறப்பு தகுதி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதில் படிப்பு மற்றும் தகுதிக்கேற்ப பதவிகள் வழங்கப்படும்.

மொத்தக் காலியிடங்கள் (Vacancy)

21

கல்வித் தகுதி (Education Qualification)

12 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பிறத் தகுதிகள்

ஒலிம்பிக், சர்வதேச மற்றும் இந்திய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்றிருக்க வேண்டும்.

வயது (Age)

18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

பதவிகளுக்கு ஏற்ப அடிப்படை சம்பளம் ரூ. 19,900 முதல் ரூ. 29,200 ஆக உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை (Selection)

திறனறித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://rrcmas.in/downloads/rrc-sports-appn-web.pdf என்ற இணையதள பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைத் தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி (Address)

The Assistant Personnel Officer, Railway Recruitment Cell, Southern Railway 3rd Floor, No 5 Dr.P.V.Cherian Crescent Road, Egmore, Chennai – 600 008.
விண்ணப்பக் கட்டணம் : SC/ST, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவுகளுக்கு ரூ 250, பொது மற்றும் OBC பிரிவுகளுக்கு ரூ.500

காலக்கெடு (Lastdate)

விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 30.11.2021

மேலும் படிக்க...

இலவச ரயில் டிக்கெட் வேண்டுமா?உடனே இதைச் செய்யுங்க!

பட்டாசு வடிவில் சாக்லேட்டுகள்- தீபாவளியையொட்டி விற்பனை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)